YouTurn

வாக்கு திருட்டுக்கு எதிராக இராணுவ வீரர்கள் போராட்டம் என பரவும் வீடியோ! உண்மை என்ன?

வாக்கு திருட்டுக்கு எதிராக இராணுவ வீரர்கள் போராட்டம் என பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

112 அவசர எண் சேவையில் வேலை செய்யும் முன்னாள் இராணுவ வீரர்கள் ஊதிய உயர்வு கேட்டு பீகாரில் நிதீஷ் குமார் அரசாங்கத்திற்கு எதிராக போராடிய போது எடுக்கப்பட்டு வீடியோ இது.

பரவிய செய்தி

பீகாரில் பி.ஜே.பி நிதீஷ் குமார் ஆட்சிக்கு எதிராக ராணுவ வீரர்கள் போராட்டம்.

வாக்கு திருடர்களுக்கு எதிராக ராகுல் காந்தி பற்ற வைத்த நெருப்பு இந்தியா முழுவதும் பற்றி எரியட்டும்.


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுப்பட்டதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் இதனை கண்டுகொள்ளமால் இருப்பதாகவும், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் வாக்கு திருடர்களை பாதுகாப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். 


இந்நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் இராணுவ சீருடை அணிந்து தேசிய கொடியுடன் ஊர்வலமாக செல்லும் வீடியோவை பதிவிட்டு, ’வாக்கு திருட்டு பற்றி ராகுல் காந்தி பேசிவரும் நிலையில், அது தொடர்பாக பீகாரில் பாஜக மற்றும் நிதீஷ் குமார் ஆட்சிக்கு எதிராக இராணுவ வீரர்கள் போராட்டம் செய்வதாக’ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’Aprajita Nafs Nefes’ என்ற ‘எக்ஸ்’ பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அதில், ‘முன்னாள் இராணுவ வீரர்கள், தற்போது 112 அவசர எண் சேவையில் வேலை செய்பவர்கள் செப்டம்பர் 9ஆம் தேதியன்று பீகாரின் தலைநகரான பாட்னாவின் தெருக்களில் இறங்கி நிதீஷ் குமார் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராடி வருகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் தேடுகையில், ‘THE TIMES OF INDIAசெய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது.  அதன்படி, ‘பீகார் தலைநகரமான பாட்னாவில் 112 அவசர எண் சேவையில் வேலை செய்யும் ஓட்டுநர்கள் பணிச்சூழல் மேம்பாட்டிற்காகவும் ஊதிய உயர்விற்காகவும் தேசிய கொடியை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பி தெருக்களில் பேரணி சென்றதாக’ தெரியவருகிறது. 



அதேபோல்PATNA PRESS’ என்ற இணைய செய்தித்தளத்திலும் ‘112 அவசர எண் சேவையில் வேலை செய்யும் முன்னாள் இராணுவ வீரர்கள் மேம்பட்ட பணிச் சூழலுக்காகவும், ஊதிய உயர்வுக்காகவும், அரசு பணியாளர்களாக அங்கீகரிக்கச் சொல்லியும் போராடி வருவதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.


image.pngimage.png


இதிலிருந்து பரப்பப்படும் வீடியோ, பீகாரில் 112 அவசர எண் சேவையில் ஓட்டுநர்களாக வேலை செய்யும் முன்னாள் இராணுவ வீரர்கள் ஊதிய உயர்வு கேட்டு நிதீஷ் குமார் அரசாங்கத்திற்கு எதிராக போராடிய போது எடுக்கப்பட்டு வீடியோ என்பது தெளிவாக தெரிகிறது. 


முடிவு:


பீகாரில் , 112 அவசர எண் சேவையில் வேலை செய்யும் முன்னாள் இராணுவ வீரர்கள் ஊதிய உயர்வு கேட்டு தெருவில் போராடிய போது எடுக்கப்பட்ட வீடியோவை, வாக்கு திருட்டிற்கு எதிராக இராணுவ வீரர்கள் போராடியதாக தவறாக பரப்பப்படுகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க