யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அர்ஜுன் சம்பத் கூறும் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு கடந்த 2025 ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதிலும், அனைத்து வணிக நிறுவனங்களையும் இந்த கட்டண உயர்வு பாதிக்காது. பொதுவான வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக நிறுவனங்களுகான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசே மானியமாக வழங்குகிறது. பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே 3.16 சதவீத கட்டண உயர்வால் செலுவுகள் அதிகரிக்கும்.
பரவிய செய்தி
மகளிர்க்கு ஐயாயிரம் ரூபாய் ஒரு புறம் வழங்கிவிட்டு மறுபுறம் வணிக நிறுவனங்களுக்கு திடீரென்று மின்சார கட்டண உயர்வை அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் ...??? கோயில்களுக்கு வியாபார தலங்களுக்கு உரிய மின்கட்டன நடைமுறை இது பொது மக்களை பாதிக்கும்

விரிவான விளக்கம்
மகளிர்க்கு ஐயாயிரம் ரூபாய் ஒரு புறம் வழங்கிவிட்டு மறுபுறம் வணிக நிறுவனங்களுக்கு திடீரென்று மின்சார கட்டண உயர்வை அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கூறி News Tamil 24x7 ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்.
அந்த நியூஸ் கார்டில் பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கான 3.16% மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல் என்றும், 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு மின்கட்டண உயர்வு இல்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிந்தது.
மகளிர்க்கு ஐயாயிரம் ரூபாய் ஒரு புறம் வழங்கிவிட்டு
மறுபுறம்
வணிக நிறுவனங்களுக்கு திடீரென்று மின்சார கட்டண உயர்வை அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் ...???
கோயில்களுக்கு வியாபார தலங்களுக்கு
உரிய மின்கட்டன நடைமுறை
இது பொது மக்களை பாதிக்கும் pic.twitter.com/iN4MNv9fBz
உண்மை என்ன?
அர்ஜூன் சம்பத் பதிவிட்ட இந்த நியூஸ் கார்ட் குறித்து முதலில் தேடினோம். அப்போது News Tamil 24x7 ஊடகத்தில் ”மின் கட்டணம் உயர்வு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!” என்ற தலைப்பில் ஜூன் 30, 2025 அன்று வெளியான செய்தி ஒன்றை பார்க்க முடிந்தது. அதில் பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்களுக்கு 3.18% மின்கட்டண உயர்வு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதிலிருந்து இது 2025ஆம் ஆண்டு வெளியான செய்தி என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, தினமணி ஊடகத்தில் ஜூலை 01, 2025 அன்று ”பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3.16% மின்கட்டணம் உயர்வு: இன்றுமுதல் அமல்” என்ற தலைப்பில் வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் பொதுவான வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக நிறுவனங்களுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசே மானியமாக வழங்குகிறது. பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே 3.16 சதவீத கட்டண உயர்வால் செலுவுகள் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, தமிழ்நாட்டில் தற்போது திடீரென்று வணிக நிறுவனங்களுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக 'இந்து மக்கள் கட்சி'யின் தலைவர் அர்ஜுன் சம்பத் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு கடந்த 2025 ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதிலும், அனைத்து வணிக நிறுவனங்களையும் இந்த கட்டண உயர்வு பாதிக்காது.