YouTurn

’அண்ணாமலை பதவியில் தொடர்வார்’ என்று பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

’அண்ணாமலை பதவியில் தொடர்வார்’ என்று பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது இரண்டு மாதம் பழைய செய்தி ஆகும்.

பரவிய செய்தி

போட்றா வெடியை #Annamalai


image.png


X Link

விரிவான விளக்கம்

கடந்த மார்ச் 25ஆம் தேதியன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது பாஜக அதிமுக கூட்டணி குறித்த விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியது. பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தடையாக இருப்பதாகவும் அதனால் அவர் மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. 



இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என்று செய்தி வெளியானதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன?


பரப்பப்படும் செய்தியில் ’News Tamil’ செய்தி ஊடகத்தின் முத்திரை இருப்பதைக் காண்கிறோம். இதனை அடிப்படையாக கொண்டு ’அண்ணாமலை மாநில தலைவராக தொடர்வார் - News Tamil’ என்ற Keywords கொண்டு இணையத்தில் தேடுகையில், ’News Tamil’ யூட்யூப் தளத்தில் இந்த செய்தியைக் காண முடிந்தது.


image.png


அதில், இந்த செய்தி கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த செய்தியில் ’அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே பாஜக தலைவராக தொடர்வார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து இது இரண்டு மாதம் பழைய செய்தி என்பது உறுதியாகிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் வெளியான செய்தியை தற்போதைய சூழலோடு தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படுகிறது.


முடிவு:


அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக தொடர்வது பற்றிய இரண்டு மாதங்கள் பழைய செய்தியை தற்போதைய செய்தி போல் பொய்யாக பரப்பிவருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.