யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலையொட்டி அளித்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில், தன்மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் எதுவும் இல்லை என்றே குறிப்பிட்டுளார். இந்நிலையில் அண்ணாமலை ஆதாரமற்ற பொய் செய்தியைப் பரப்பி வருகிறார்.
பரவிய செய்தி
முதல்வர் ஸ்டாலின் மீது இரண்டு CBI வழக்குகள் இருக்கிறது - அண்ணாமலை, பாஜக முன்னாள் மாநில தலைவர்

விரிவான விளக்கம்
உடுமலைபேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்காக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் மீது இரண்டு CBI வழக்குகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
உண்மை என்ன?
முதல்வர் ஸ்டாலின் மீது இரண்டு CBI வழக்குகள் உள்ளதா என்பது குறித்து ஊடகங்களில் ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது இது போன்ற எந்த செய்தியும் வெளியாகவில்லை.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலையொட்டி அளித்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில் இது குறித்து ஏதேனும் தகவல் உள்ளதா என்பதை தேடினோம். சரியாக 3ஆம் பக்கத்தில் குற்றவழக்குகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். அதில் ”தன்மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் எதுவும் இல்லை என்று உறுதியளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுளார். இந்நிலையில் அண்ணாமலை ஆதாரமற்ற பொய் செய்தியைப் பரப்பி வருகிறார். மேலும் ‘சாணக்யா டிவி’-யும் அண்ணாமலை பரப்பும் பொய்யை செய்தியாக வெளியிட்டுள்ளது.

முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, முதல்வர் ஸ்டாலின் மீது இரண்டு CBI வழக்குகள் இருப்பதாக பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை பரப்பும் செய்திகள் தவறானவை.