YouTurn

‘PRASHAD’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கூட பெறவில்லையா? அண்ணாமலை சொல்லும் பொய்!

 ‘PRASHAD’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கூட பெறவில்லையா? அண்ணாமலை சொல்லும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இத்திட்டத்தின் கீழ் கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டுமே 8 நவகிரக கோவில்களை மேம்படுத்தும் திட்டத்திற்காக 40.94 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

‘ஒன்றிய சுற்றுலாத் துறையின் ‘PRASHAD’ திட்டத்தின் கீழ் கோவில்களை புனரமைப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கூட பெறவில்லை’ - அண்ணாமலை.


YouTube Link

விரிவான விளக்கம்

தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசிய பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, ‘கோவில்களை புனரமைப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவும் ஒன்றிய அரசு, Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASHAD) என்ற திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்குகிறது. ஆனால் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கூட பெறவில்லை’ என்று பேசியிருக்கிறார்.



உண்மை என்ன?


ஒன்றிய சுற்றுலாத்துறை ‘PRASHAD’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் நிதி ஒதுக்கியிருக்கிறதா? என்பது குறித்து தேடினோம். கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றைக் காணமுடிந்தது. 



அதன் படி, ‘PRASHAD’ திட்டத்தின் கீழ், கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டுமே 8 நவகிரக கோவில்களை மேம்படுத்தும் திட்டத்திற்காக 40.94 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய சுற்றுலா துறை ஒதுக்கியுள்ளது. 



அதேபோல் 2024ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி,  ‘PRASHAD’ திட்டத்தின் கீழ் ஒன்றிய சுற்றுலாத் துறை 1646.99 கோடி மதிப்பில் நாடு முழுவதும் 48 திட்டங்களை (projects) செயல்படுத்தி வருகிறது. அவற்றில் 2 திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் தமிழ்நாட்டில் உள்ள 8 நவக்கிரகக் கோயில்களை மேம்படுத்தும்  திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களிலிருந்து, ‘PRASHAD’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டுமே 40.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.


முடிவு:


‘PRASHAD’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் சுற்றுலா துறையிடமிருந்து ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்று பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை தவறான தகவலை பரப்பி வருகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க