யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
'மெலிசா' புயலின் மையப் பகுதிக்குச் சென்று அமெரிக்க விமானப்படை வீரர்கள் எடுத்ததாகப் பரவும் இந்த வீடியோ உண்மையானது அல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
மேற்கிந்திய தீவுகள் ஜமைக்கா நாட்டுக்கு அருகே நிலைகொண்டு உள்ள 'மெலிசா' என்ற சூறாவளிப் புயலின் மையப் பகுதிக்குச் சென்று வீடியோ எடுத்த அமெரிக்க விமானப்படை வீரர்கள்! மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் சுழலும் இந்த புயல், ஜமைக்கா, ஹைதி, டோமினிகன் குடியரசு ஆகிய நாடுகளை புரட்டிப் போட்டு வருகிறது
விரிவான விளக்கம்
கரீபியன் கடல் பகுதியில் உருவாகிய “மெலிசா” எனும் சூறாவளி 5ஆம் வகை புயலாக வலுப்பெற்று ஜமைக்கா நாட்டை தாக்கியது. இதனால் அந்த நாட்டில் பெரும் பேரிடர் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'மெலிசா' சூறாவளிப் புயலின் மையப் பகுதிக்குச் சென்று அமெரிக்க விமானப்படை வீரர்கள் எடுத்த வீடியோ என்று கூறி, வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில் விமானத்தில் இருந்து புயல் சுழன்று வரும் காட்சியை படம் பிடித்திருப்பது போன்று உள்ளதை காணமுடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் வீடியோ உண்மையானது அல்ல என்பதை அறிய முடிந்தது.
“Earthimpacts” டிக்டாக் பக்கத்தில் பரவி வீடியோ அக்டோபர் 31 அன்று “AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் “Earthimpacts” டிக்டாக் பக்கத்தில் இதே போன்று பல AI வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.

எனவே இதை உறுதி செய்ய “wasitai” இணையதளப் பக்கத்திலும், பரவி வரும் வீடியோவின் காட்சிகளை பதிவேற்றி ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில், இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் என்பதை உறுதி செய்ய முடிந்தது.

முடிவு:
நம் தேடலில், 'மெலிசா' என்ற சூறாவளிப் புயலின் மையப் பகுதிக்குச் சென்று அமெரிக்க விமானப்படை வீரர்கள் எடுத்ததாகப் பரவும் இந்த வீடியோ உண்மையானது அல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.