YouTurn

'கேரளப் பேருந்து சர்ச்சையில் உயிரிழந்த தீபக்கின் மனைவி' எனப் பரவும் AI புகைப்படம்!

'கேரளப் பேருந்து சர்ச்சையில் உயிரிழந்த தீபக்கின் மனைவி' எனப் பரவும் AI புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கேரள பேருந்து சர்ச்சையில் உயிரிழந்த தீபக்கின் அழகான மனைவி' என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

அழகான மனைவி அழகான வாழ்க்கைன்னு இருந்திருக்கார். பாவம். விதி யாரை விட்டது?



X Link | Archive Link

விரிவான விளக்கம்

கேரளப் பேருந்தில் பயணித்த தன்னிடம் பாலியல் சீண்டல் செய்ததாகக் கூறி ஒரு பெண், தீபக் (42) என்ற நபரை குற்றம் சாட்டி சமீபத்தில் சர்ச்சையான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜனவரி 18 அன்று தீபக் அவரது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் 'கேரளப் பேருந்து சர்ச்சையில் உயிரிழந்த தீபக்கின் அழகான மனைவி' என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் தற்போது புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. 


Facebook Link:


உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தீபக்கின் மனைவி குறித்து எந்த செய்திகளும் கிடைக்கவில்லை. 



ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் தீபக்கின் தாய் மற்றும் தந்தை குறித்தே செய்திகள் காணப்பட்டன. எதிலும் பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது போன்று, தீபக்கின் மனைவி என்று குறிப்பிட்டு புகைப்படத்துடன் செய்திகள் இல்லை. மேலும் அவர் திருமணமானவரா என்பது குறித்து கூட எந்த ஊடகத்திலும் செய்தி இல்லை.



அப்படி இருக்க, தீபக்கின் மனைவி என்று குறிப்பிட்டு புகைப்படம் பரவியதால், சந்தேகம் எழுந்தது. மேலும் பரவி வரும் புகைப்படத்தில் காணப்படும் பெண்ணின் தோற்றமும் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. 


எனவே, “Hive Moderation” இணையதளப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றி ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில், இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படம் தான் என்று நமக்கு உறுதிபடுத்தியது. 



இதே போன்று, “Sight Engine “ இணையதளப் பக்கத்திலும் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றி ஆய்வு செய்து உறுதிபடுத்தியுள்ளோம். 



முடிவு: 


நம் தேடலில்,  'கேரளப் பேருந்து சர்ச்சையில் உயிரிழந்த தீபக்கின் அழகான மனைவி' என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க