YouTurn

அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கரை நியமித்ததாகப் பரவும் போலி அறிக்கை

அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கரை நியமித்ததாகப் பரவும் போலி அறிக்கை

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் குழு ஆலோசகராக கழக உறுப்பினர். பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப்பின் ஏகமனதுடன் நியமனம் செய்கிறேன் - எடப்பாடி பழனிசாமி 

Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

துரையில் ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக கட்சியின் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக அறியப்படும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மதுரையில் மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவரது ஆதரவு பக்கங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், சவுக்கு சங்கரை அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்து உள்ளதாக அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.







News link | Archive link  

உண்மை என்ன ? 

சமூக வலைதளங்களில் பரவும் தகவல் குறித்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், ஆகஸ்ட் 19ம் தேதி சவுக்கு சங்கர் குறித்தோ அல்லது மாநாடு குறித்தோ எந்தப் பதிவுகளும் இல்லை. இறுதியாக ஆகஸ்ட் 16ம் தேதியே பதிவுகள் வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதியே இறுதியாக அறிக்கை வெளியாகி இருக்கிறது.



Twitter link

எனவே, பரவும் அதிமுக அறிக்கை பக்கத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2023 ஜூலை 11ம் தேதி அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைவது குறித்து வெளியான அறிக்கையே கிடைத்தது. இந்த அறிக்கையில், சவுக்கு சங்கர் குறித்து போலியாக எடிட் செய்து பரப்பி உள்ளனர்.



மேலும் படிக்க : தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம் எனப் பரவும் போலிச் செய்தி !

மேலும் படிக்க : சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள், போலிச் செய்திகளின் தொகுப்பு !

இதற்கு முன்பாக, தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம் எனப் போலிச் செய்திகள் வெளியாகின. அதேபோல், சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள், போலிச் செய்திகளின் தொகுப்பு கட்டுரையும் வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கரை நியமித்ததாகப் பரவும் அறிக்கை போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க