YouTurn

சங்கிகளுக்கு அனுமதி இல்லை என A2B உணவகத்தில் அறிவிப்புப் பலகை எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம் !

சங்கிகளுக்கு அனுமதி இல்லை என A2B உணவகத்தில் அறிவிப்புப் பலகை எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சங்கிகளுக்கு வந்த சோதனை... 

Facebook link 

விரிவான விளக்கம்

அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாச ராஜா நேர்காணல் ஒன்றில் பேசும்போது ‘யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் செய்யலாம் என்கிற நிலை ஏற்படத் தந்தை பெரியாரும் ஒரு காரணம்’ எனப் பேசினார். இதற்கு வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவிக்க அந்நிர்வாகம் குறித்து அவதூறுகளைப் பரப்பினர். அது குறித்து யூடர்ன் முன்னரே கட்டுரை வெளியிட்டிருந்தது. 



இந்நிலையில் A2B உணவகத்தில் ‘மாட்டுச்சாணம் சாப்பிடுபவர்கள் மாற்றுப் பாதையில் செல்லவும். சங்கிகளுக்கு அனுமதி இல்லை’ என அந்நிர்வாகத்தினரால் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு இருப்பதாகப் புகைப்படம் ஒன்றினை திமுக-வினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.



Archive link  

உண்மை என்ன ?

சங்கிகளுக்கு அனுமதி இல்லை எனப் பரவக் கூடிய அறிவிப்புப் பலகையில் ‘சங்கிகளுக்கு’ மற்றும் ‘அனுமதி இல்லை’ என்கிற வார்த்தைகளுக்கு இடையே எழுத்துரு அளவு (Font size) வித்தியாசம் இருப்பதைக் காண முடிகிறது.



மேற்கொண்டு அடையார் ஆனந்த பவன் அறிவிப்புப் பலகை குறித்து சமூக வலைத்தளங்களில் தேடியதில், வலதுசாரியும், அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே சாமி A2B பற்றி விவாதங்கள் நடந்த போது தனது டிவிட்டர் பக்கத்தில் (2023, அக்.23) A2B அறிவிப்புப் பலகை படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.



X link 

அதில், ‘வியாபாரம், அரசியல் மற்றும் ரியல் எஸ்டேட் பேச அனுமதி இல்லை. - இப்படிக்கு நிர்வாகம்’ என்று உள்ளது. அந்த படத்தில் ‘இப்படிக்கு நிர்வாகம்’ என்ற எழுத்திற்கு மேல் வெளிச்சம் விழுவதைக் காணலாம். இதே வெளிச்சம் பரவக் கூடிய படத்திலும் உள்ளது. 



இதேபோல் 2023, ஜூன் 4ம் தேதி அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் வியாபாரம், அரசியல் மற்றும் ரியல் எஸ்டேட் பேச அனுமதி இல்லை என வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை குறித்து ’சமயம்’ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 



இவற்றில் இருந்து A2B உணவகத்தில் சங்கிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : அடையார் ஆனந்த பவன் ஸ்ரீனிவாச ராஜா இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக அவதூறு பரப்பும் வலதுசாரிகள் !

அடையார் ஆனந்த பவன் உணவக உரிமையாளர் ஸ்ரீனிவாச ராஜா பேசியது பற்றி வதந்தி பரவிய போது அது குறித்த கட்டுரையினை யூடர்ன் வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க : அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வழக்கு.. கிஷோர் கே சுவாமி பதிவிட்ட வதந்திகளின் தொகுப்பு

முடிவு : 

A2B உணவகத்தில் ‘சங்கிளுக்கு அனுமதி இல்லை’ என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதாகப் பரவும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டது. அக்கடையில் வியாபாரம், அரசியல் மற்றும் ரியல் எஸ்டேட் பேச அனுமதி இல்லை என்றுதான் உள்ளது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க