YouTurn

'தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி' என பரப்பப்படும் தகவல் - உண்மை என்ன?

'தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி' என பரப்பப்படும் தகவல் - உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது பொழுதுபோக்கு அம்சத்திற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்ட ‘Scripted’ வீடியோவாகும்.

பரவிய செய்தி

நம்ம நாடு எங்கே சென்று கொண்டுருக்கிறது.. தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி ..


image.png


X Link 

விரிவான விளக்கம்

ஒரு இளம் பெண்ணுடன் இளைஞரும், வயதான முதியவரும் மாலையுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, ‘தந்தைக்கும் மகனுக்கும் ஒரே மனைவி’ என்று திமுக ஆதரவாளர் ஒருவர் தனது ‘எக்ஸ்’ கணக்கில் பதிவிட்டிருந்தார்.


https://x.com/i/web/status/1858678666039005397

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Kanhaiya Singh shorts’ என்னும் யூட்யூப் பக்கத்தில் இந்த வீடியோவை காண முடிந்தது. இந்த வீடியோ கடந்த நவம்பர் 10ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 


image.png


இந்த ‘Kanhaiya Singh shorts’ யூட்யூப் பக்கத்தில் இதுபோன்ற சில வீடியோக்கள் ‘அதே நபர்களை’ வைத்து எடுக்கப்பட்டதாக இருப்பதைக் காண முடிந்தது. 

அவற்றில் சில வீடியோகளை பார்க்கையில், அவற்றில்  ’இந்த வீடியோ முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்திற்காக எடுக்கப்பட்டது’ என்ற ‘Disclaimer’ குறிப்பு இருப்பதை காணமுடிந்தது. பரப்பப்படும் வீடியோவில் கூட 0.07 நொடியில் இந்த ‘Disclaimer’ குறிப்பு காட்டப்படுகிறது.


இதிலிருந்து, இந்த வீடியோ திட்டமிட்டு எடுக்கப்பட்ட ‘Scripted’ வீடியோ என்பது தெளிவாகிறது. இந்த ‘Scripted’ வீடியோவை உண்மையானது என நினைத்து தவறாக பரப்புகிறார்கள். 


முடிவு:


இந்த வீடியோ திட்டமிட்டு எடுக்கப்பட்ட ‘Scripted’ வீடியோவாகும். இதனை உண்மையென நினைத்து தவறாக பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.