YouTurn

கலைஞர் கருணாநிதி பற்றிய பழ.நெடுமாறனின் புத்தகத்தை திருமாவளவன் பரிசளித்ததாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

கலைஞர் கருணாநிதி பற்றிய பழ.நெடுமாறனின் புத்தகத்தை திருமாவளவன் பரிசளித்ததாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘எருமை மறம்’ என்னும் புத்தகத்தின் அட்டைப்படத்தை ‘ஈழத்தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம்’ என்று Edit செய்துள்ளார்கள்.

பரவிய செய்தி

அது என்ன புத்தகம்? Zoom செய்து பாருங்கள்... #திமுக_கேடு_தரும் #திராவிட_மாடல்  #ADMK_TNJ


X Link

விரிவான விளக்கம்

நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் பா.ரஞ்சித், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகிய இருவரும் ‘‘ஈழத்தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம்” என்ற புத்தகத்தை பரிசளித்து பெற்றுக்கொள்வது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ’திமுக மக்களுக்கு கேடு தரும் கட்சி’ என்று அதிமுகவினர் உட்பட பலரும் சமூக வலைதளத்தில் பரப்பி வருகிறார்கள். 

https://x.com/i/web/status/1883887670017032314

உண்மை என்ன:

பரப்பப்ப்படும் இந்த புகைப்படத்தை கொண்டு Reverse Image Searching முறையில் தேடியதில், ‘Press Meet TV’ என்ற தளத்தில் ஒரு செய்தியை காணமுடிந்தது. 

image.png

அதில், 'எழுத்தாளர் மௌனன் யாத்ரிகா எழுதிய ‘எருமை மறம்’ என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா 23.02.2024 சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நூலை வெளியிட அதனை  நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் பா. இரஞ்சித் பெற்றுக் கொண்டார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், தொல்.திருமாவளவனிடமிருந்து பா.ரஞ்சித் நூலை பெற்றுக்கொள்ளும் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. இந்த புகைப்படம் பரப்பப்படும் புகைப்படத்தை ஒத்ததாக இருப்பதைக் காண்கிறோம்.

இதிலிருந்து,  ‘எருமை மறம்’ நூலின் அட்டைப்படத்தை  பழ.நெடுமாறன் எழுதிய ‘ஈழத்தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம்’ என்ற நூலைக் கொண்டு Edit செய்யப்பட்டிருக்கிறது தெளிவாகிறது. 

முடிவு: 

‘எருமை மறம்’ நூலின் அட்டைப்படத்தை பழ.நெடுமாறன் எழுதிய ‘ஈழத்தமிழருக்கு கருணாநிதி இழைத்த துரோகம்’ என்ற நூலைக் கொண்டு Edit செய்து அதிமுகவினர் உட்பட பலரும் தவறாக பரப்பிவருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.