யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது Edit செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட போலியான News Card ஆகும். திமுக வேட்பாளர் அவ்வாறு எதுவும் சொல்லவில்லை.
பரவிய செய்தி
முருக பக்தர்களுக்கு சவால் விடும் திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர்
கலவரத்தை தூண்ட முயற்சி!
தமிழர்களே! ஹிந்துக்களே! முருக பக்தர்களே! வெற்றிவேல்! வீரவேல்!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம், திமுக அவை தோற்கடிப்போம்!

விரிவான விளக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகின்றன ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடுகளை முடித்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி போட்டியிட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், ’மீண்டும் திமுக தலைமையிலான அரசு அமைந்தால், திருப்பரங்குன்றம் தர்கா மாண்பை பேணிகாக்கும் விதமாக தீபம் ஏற்றுவதை தடைசெய்யும் விதமான சட்ட மசோதா கொண்டுவரப்படும்’ என்று கிருத்திகா தங்கப்பாண்டி வாக்குறுதி கொடுத்ததாக குறிப்பிடும் ’News 7’ ஊடகத்தின் News Card ஒன்றை ’இந்து மக்கள் கட்சி’யின் தலைவர் அர்ஜூன் சம்பத் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.
இது உண்மையா?
முருக பக்தர்களுக்கு சவால் விடும்
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர்
கலவரத்தை தூண்ட முயற்சி!
தமிழர்களே! ஹிந்துக்களே! முருக பக்தர்களே!
வெற்றிவேல்! வீரவேல்!
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்
திமுக அவை தோற்கடிப்போம்! pic.twitter.com/U8rT2XIU6W
உண்மை என்ன?
பரப்பப்படும் News Card-ஐ Reverse Image search மூலமாக இணையத்தில் தேடிய போது, மார்ச் 28ஆம் தேதி ’News 7 தமிழ்’ ஊடகம் வெளியிட்டுள்ள News Card ஒன்றைக் காணமுடிந்தது.
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர்!#KrithikaThangapandi | #DMK | #Thiruparankundram | #TamilNews | #LatestNews pic.twitter.com/8lx9K43uYt
அதில், மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியின் வேட்பாளராக கிருத்திகா தங்கப்பாண்டியை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உண்மையான News Card-ஐ Edit செய்து, திருப்பரங்குன்றம் தர்ஹாவில் தீபம் ஏற்றுவதை தடைசெய்யும் விதமான சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்று கிருத்திகா தங்கப்பாண்டி வாக்குறுதி கொடுத்ததாக போலியான News Card-ஐ உருவாக்கி பரப்பிவருகிறார்கள்.
முடிவு:
உண்மையான News Card-ஐ Edit செய்து உருவாக்கப்பட்ட போலியான News Card-ஐ சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்.