YouTurn

யூடியூபருக்கு பாமகவினர் மிரட்டல் விடுக்கும் வீடியோவை தவறாகப் பரப்பும் தவெகவினர்!

யூடியூபருக்கு பாமகவினர் மிரட்டல் விடுக்கும் வீடியோவை தவறாகப் பரப்பும் தவெகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

வீடியோவில், யூடியூபருக்கு பாமகவினர் மிரட்டல் விடுப்பதையே காண முடிகிறது. இதை திமுகவினர் மிரட்டியதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

திமுக ரவுடி கும்பல் போன் பன்னி மிரட்டல் விடுக்கும் காணொளி


X Link | Archive Link

விரிவான விளக்கம்

“NEWS TN“ பக்கத்தைச் சேர்ந்த யூடியூபருக்கு திமுகவினர் மிரட்டல் விடுத்த போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் யூடியூபர் ஒருவருக்கு தோடர்ந்து போனில் மிரட்டல் அழைப்புகள் வருவதைக் காண முடிகிறது. 


X Link | Archive Link


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்ததில், இதன் உண்மையான வீடியோ “NEWS TN “ என்ற யூடியூப் பக்கத்தில் “சாதாரண விமர்சனத்தை கூட தாங்க முடியாத தொண்டர்கள் | Seeman | Vijay | Anbumani | Premalatha“ என்ற தலைப்பில், கடந்த மே 18 அன்று பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 



வீடியோவில், யூடியூபருக்கு பாமகவினர் ஒவ்வொருவராக மிரட்டல் விடுப்பதைக் காண முடிகிறது. இதை திமுகவினர் மிரட்டியதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.


மேலும் இதே போன்று, நாம் தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுக்கும் மற்றொரு வீடியோவையும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்துள்ளதையும் காண முடிகிறது. 



முடிவு: 


நம் தேடலில், “NEWS TN“ பக்கத்தைச் சேர்ந்த யூடியூபருக்கு திமுகவினர் மிரட்டல் விடுத்த போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.