யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உடல் பருமனால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிகரெட் பக்கெட்டில் உள்ள எச்சரிக்கை வாசகம் போலவே, இனி சமோசா, ஜிலேபி போல தின்பண்ட வகைகளுக்கும் சர்க்கரை மற்றும் எண்ணெய் குறித்த எச்சரிக்கை பலகைகளை வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல் எனப் பரவும் செய்திகள் போலியானவை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
Obesityக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், Cigarette packsல் இடம் பெற்றுள்ள warning note போலவே இனி சமோசா,
ஜிலேபி போன்ற snacks வகைகளுக்கும் சர்க்கரை மற்றும் எண்ணெய் குறித்த எச்சரிக்கை பலகைகளை வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளதாக The Whistle tv என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து தேடி பார்த்தோம். அப்போது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் சமோசா, ஜிலேபி, லட்டு போன்ற உணவுப் பொருட்களில் எச்சரிக்கை பலகைகளை வெளியிட மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்ற செய்தி தவறானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் ஒன்றிய அரசுனுடைய PIB Fact Check ஊடகம், பரப்பப்படும் செய்தி தவறானது என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் அதில் எண்ணெய் மற்றும் சர்க்கரை வாரியங்களின் பணியிடங்களை காட்சிப்படுத்துவது தொடர்பான ஆலோசனையை தான் மத்திய சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Media reports have claimed that @MoHFW_INDIA has directed all central government institutions to issue Warning Labels on food products such as samosa, jalebi and laddoo.#PIBFactCheck
❌ This claim is Fake
✅ The Advisory does not direct carrying of Warning Labels on certain… pic.twitter.com/0OLwpwLi9H
எனவே லட்டு, ஜிலேபி போன்ற தின்பண்ட வகைகளில் எச்சரிக்கை பலகைகளை குறித்த எந்த அறிவிப்பையும் சுகாதாரத்துறை வெளியிடவில்லை என்று ஒன்றிய அரசு உறுதி செய்துள்ளது.
முடிவு:
நம் தேடலில் உடல் பருமனால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிகரெட் பக்கெட்டில் உள்ள எச்சரிக்கை வாசகம் போலவே, இனி சமோசா, ஜிலேபி போல தின்பண்ட வகைகளுக்கும் சர்க்கரை மற்றும் எண்ணெய் குறித்த எச்சரிக்கை பலகைகளை வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல் எனப் பரவும் செய்திகள் போலியானவை என்பது தெரியவந்தது.
