YouTurn

விஜயை ஒருமையில் திட்டிய அமைச்சர் டிஆர்பி ராஜா என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

விஜயை ஒருமையில் திட்டிய அமைச்சர் டிஆர்பி ராஜா என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

"சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமா கேள்வி கேளுங்கள். பதில் சொல்றேன்." - என்றே அமைச்சர் டிஆர்பி ராஜா கூறி இருக்கிறார். கண்டவனுக்கு என்று கூறியதாகத் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

"கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" தவெக தலைவர் விஜயை ஒருமையில் திட்டிய அமைச்சர் 

@TRBRajaa

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி செப்டம்பர் 13-ந்தேதி திருச்சி, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து செப்டம்பர் 20 அன்று அவர் நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அப்போது விஜய், "சிஎம் சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.. " என்று பேசியிருந்தார். 

இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிடம் கேட்டதற்கு, "கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று கூறியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

முதலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களை சந்தித்த வீடியோவை தேடிப் பார்த்தோம். அப்போது பாலிமர் செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் ”விஜய் குற்றச்சாட்டு குறித்த கேள்வி.. சொல்ல மறுத்த அமைச்சர் TRB.ராஜா..!!” என்ற தலைப்பில் செப்டம்பர் 21, 2025 அன்று முழு பேட்டியும் பதிவாகியிருந்தது. அதில் 0.10வது விநாடியில் ’வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா’ என்று விஜய் பேசியுள்ளார் என்றும், இதை பற்றி உங்கள் கருத்து என்றும் செய்தியாளர் அமைச்சரிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா "சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமா கேள்வி கேளுங்கள்” என்றே பதிலளித்திருந்தார். 


இது குறித்து மேலும் தேடிய போது,தினத்தந்தி ஊடகத்தில் ”சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது- டி.ஆர்.பி.ராஜா” என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா என த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரை பார்த்து விமர்சனம் செய்தது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.ஆர்.பி. ராஜா, ”சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமான கேள்வி கேளுங்கள். பதில் சொல்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்ததாக பதிவாகியிருந்தது. 


முடிவு: 

எனவே, ”சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமா கேள்வி கேளுங்கள். பதில் சொல்றேன்." - என்றே அமைச்சர் டிஆர்பி ராஜா கூறி இருக்கிறார். கண்டவனுக்கு என்று கூறியதாகத் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க