யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது திருமணம் தாண்டிய உறவு காரணமாக மாமனாரை மருமகள் எரித்து கொல்ல முயன்ற சம்பவமாகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
உடலில் தீ வைக்கப்பட்ட ஒருவர் உயிர் போகும் வேதனையில் சாலையில் ஓடுகிறார். அவரை பார்க்கும் மக்கள் பயத்தில் விலகி ஓடுகிறார்கள். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ‘தமிழ்நாட்டில் விவசாயி ஒருவரை திமுக கட்சியினர் உயிருடன் எரித்துவிட்டனர்’ என்று தவெக ஆதரவாளரால் பரப்புகிறார்.
DMK Goons burning up a Farmer alive.
Law and Order is a Joke in Tamil Nadu ‼️pic.twitter.com/2wXx0aY08E
உண்மை என்ன?
சமீபத்தில் விவசாயி ஒருவர் தெருவில் எரிக்கப்பட்டது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். ‘Polimer News’ செய்தித்தளத்தில் ஜனவரி 30ஆம் தேதியன்று வெளியான ஒரு செய்தியைக் காணமுடிந்தது.

அதன்படி, ’கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் மாளிகம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முந்திரி விவசாயி ஆவார். இவரது மகன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பின்னர் இவரது மருமகள் ஜெயப்பிரியா-க்கு மணிகண்டன் என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனை ராஜேந்திரன் கண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜெயப்பிரியாவின் தூண்டுதலால் மணிகண்டன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ராஜேந்திரனை சாலையில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இது தொடர்பாக ஜெயப்பிரியா, மணிகண்டன் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
‘News 18 தமிழ்நாடு’ செய்தித்தளத்தில் வெளியான செய்தியிலும் இதே தகவல்களை காணமுடிகிறது.
இதிலிருந்து, இது திருமணம் தாண்டிய உறவு காரணமாக மாமனாரை மருமகள் எரித்த சம்பவம் என்பது உறுதியாகிறது.
முடிவு:
திருமணம் தாண்டிய உறவு காரணமாக மாமனாரை மருமகள் எரித்த சம்பவத்தை திமுகவினர் விவசாயி ஒருவரை உயிருடன் எரித்துவிட்டதாக தவெக ஆதரவாளரால் தவறாக பரப்பப்படுகிறது.
