YouTurn

இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் சேருவார்கள் என ஒவைசி சொன்னதாகப் பரவும் பொய்!

இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் சேருவார்கள் என ஒவைசி சொன்னதாகப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்து விடுவார்கள் என அசாதுதீன் ஒவைசி கூறியதாகப் பரவும் பொய்.

பரவிய செய்தி

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் சேருவார்கள். -ஒவைசி



X link

விரிவான விளக்கம்

இந்தியா - பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்துவிடுவார்கள் என AIMIM (All India Majlis-e-Ittehadul Muslimeen) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கூறியதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

https://x.com/i/web/status/1830787041036054821


இதே தலைப்பில் ’Kashmir Observer’ என்ற தளத்தில் 2014, செப்டம்பர் 1ஆம் தேதி செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. 


If India attacks Pak, Indian Muslims will join Pak army: Owaisi


உண்மை என்ன?


பரவக்கூடிய படத்தில் உள்ள தலைப்பைக் கொண்டு இணையத்தில் தேடியதில், இதுதொடர்பாக ‘Headlines Today’ ஊடகத்துக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அளித்த நேர்காணலில் அசாதுதீன் ஒவைசி விளக்கம் அளித்துள்ளார். தற்போது பரவும் தகவல் குறித்து அந்நேர்காணலில் ஒவைசியிடம் ஊடகவியலாளர் கரண் தாப்பர் கேள்வி எழுப்புகிறார். 


அதற்கு, தான் அப்படி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஒவைசி பதில் அளித்துள்ளார். 



மேலும் 2014, செப்டம்பர் 2ஆம் தேதியே ஒவைசி தனது எக்ஸ் பக்கத்தில், இதுதொடர்பாக தனது வழக்கறிஞர் ‘Jammu observer’ ஊடகத்துக்கு சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்புவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.


https://x.com/i/web/status/506854693448851456


இவற்றிலிருந்து அசாதுதீன் ஒவைசி கூறாத கருத்தை சுமார் 10 ஆண்டுகளாக வலதுசாரிகள் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.


முடிவு: 


பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் இராணுவத்தில் சேர்ந்து விடுவார்கள் என அசாதுதீன் ஒவைசி கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. 2014ஆம் ஆண்டு இத்தகவல் பரவிய போதே அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க