YouTurn

'விஜய் ஒரு தெலுங்கர்' என ஏ.ஆர்.ரகுமான் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

'விஜய் ஒரு தெலுங்கர்' என ஏ.ஆர்.ரகுமான் கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இதற்கு முன்பும் “தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல தலைவன் வர வேண்டும், தமிழ்நாட்டை மாற்ற வேண்டும், விவசாயிகள் வாழ்கையை உயர்த்த வேண்டும். அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ள கூடாது. தமிழ்நாட்டின் கல்வி தரம் மாற வேண்டும், தமிழன் உலகை ஆள வேண்டும் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியதாகக் கூறி சமூக ஊடகங்களில் வைரலாக செய்தி பரவியது.

பரவிய செய்தி

தமிழன் தான் ஆள வேண்டும் ஆனால் விஜய் தெலுங்கர்.


Facebook Link:

விரிவான விளக்கம்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், “தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். ஆனால் விஜய் தெலுங்கர்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியதாகக் கூறி நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.



உண்மை என்ன?


பரவி வரும் செய்தி குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது போலியான செய்தி என்பது உறுதியானது. 


“தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும். ஆனால் விஜய் தெலுங்கர்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளாரா என்பது குறித்து,  ஏ.ஆர்.ரகுமானின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்து பார்த்தோம். அதில், இது குறித்து அவர் எந்த செய்தியும் கூறவில்லை என்பதை அறிய முடிந்தது. 


மேலும் இது குறித்து தேடியதில், ஏ.ஆர்.ரகுமான் “News18 Tamil Nadu” ஊடகத்திற்கு கடந்த 2017-ல் அளித்த பேட்டி ஒன்று கிடைத்தது. அதில், “விவசாயிகள், நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி பற்றி வினவிய போது, தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர் ஒருவர் வர வேண்டும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் அவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளாமல் தடுக்க வேண்டும், தமிழ்நாட்டின் கல்வித் தரம் உயர வேண்டும், தமிழ்நாடு கிளாசிக் ஆகணும் , தமிழன் உலகை ஆள வேண்டும்” என்றுக் கூறியுள்ளதைக் காண முடிந்தது. 



இது குறித்தும் ஏற்கனவே கடந்த 2017-ல் நம் யூடர்ன் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: தமிழன் உலகை ஆள வேண்டும்- ஏ.ஆர்.ரகுமான் கருத்து 


இதன் மூலம், தமிழன் உலகை ஆள வேண்டும் என்று ரகுமான் கூறியது உண்மையே, ஆனால் தற்போது “தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் ஆனால் விஜய் தெலுங்கர்” என்று அவர் கூறியதாகப் பரவும் செய்திகள் போலியானவை என்பதை தெளிவுபடுத்த முடிகிறது. 



முடிவு: 


நம் தேடலில், "தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் ஆனால் விஜய் தெலுங்கர்” என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பது உறுதியாகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.