YouTurn

ராகுல்காந்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பதாகப் பரவும் தவறானப் புகைப்படம்!

ராகுல்காந்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பதாகப் பரவும் தவறானப் புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

எதிர்கட்சித் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, தனக்கு திருமணம் இன்னும் ஆக வில்லை என உலகை நம்ப வைத்து வருகிறார், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

பரவிய செய்தி

தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என உலகை நம்பவைத்த இந்தியாவின் எதிர்கட்சி தலைவர், பிரிட்டிஷ் மற்றும் இத்தாலியின் நிரந்தர குடியுரிமை பெற்றவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன்.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

"எதிர்கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என உலகை நம்ப வைத்து வருகிறார், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள்" என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. 

பரவி வரும் புகைப்படத்தில், ராகுல்காந்தி மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு இளவயது பெண்ணுடன் ஹெலிகாப்டருக்கு வெளியே நிற்பதைக் காணமுடிகிறது. 

உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை “Google Reverse Image Search” மூலம் தேடிப் பார்த்ததில், ‘ABP Live’ ஊடகப் பக்கத்தில் பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு “ ராகுல்காந்தி மூன்று மாணவிகளுக்கு அளித்த வாக்குறுதியை 10 நாட்களில் நிறைவேற்றினார், அது பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்“ என்ற தலைப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 09 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 

அதில், “நவம்பர் 29 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினிக்கு சென்ற ராகுல் காந்தி 11ஆம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், ஆனந்தா மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவி கிரிஜா ஆகியோரை சந்தித்தார். அப்போது மாணவிகள் ராகுலுடன் விமானத்தில் பயணம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். ராகுல் விரைவில் விமானப் பயணத்தில் அழைத்துச் செல்வதாக மூவரிடமும் உறுதியளித்தார்.

இந்நிலையில் ராகுல்காந்தி ராஜஸ்தானில் தனது பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டிருந்தபோது, மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதியை 10 நாட்களில் நிறைவேற்றினார்” என்றும் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.

இதே போன்று, ‘Kanak News’ யூடியூப் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது வாக்குறுதியை நிறைவேற்றி, மாணவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றார்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் அதே மாணவர்கள், ராகுல் காந்தியுடன் ஹெலிகாப்டர் பயணம் செய்த அனுபவம் குறித்து பகிர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. 



மேலும் Rajasthan Tak, Patrika, The Lallantop, மற்றும் Nav Bharat Times போன்ற ஊடகங்களும் பரவி வரும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளதைக் காணமுடிகிறது. 

இதன்மூலம், ராகுல் காந்தி ராஜஸ்தானில் தனது பாரத் ஜோடோ யாத்திரையின்போது மாணவர்களின் விருப்பதிற்கேற்ப கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், ராகுல் காந்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.