YouTurn

உலகின் மிகப் பெரிய பலாப்பழம் எனப் பரவும் AI வீடியோ!

உலகின் மிகப் பெரிய பலாப்பழம் எனப் பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது உண்மையான வீடியோ அல்ல. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான வீடியோவை, உலகின் மிகப் பெரிய பலாப்பழம் இலங்கையில் உள்ளதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

உலகின் மிகப் பெரிய பழுத்த பலாப்பழம் இலங்கையின் கேகாலை மாவட்டத்தில்.. 240 கிலோ..


X Link | Archive Link

விரிவான விளக்கம்

உலகின் மிகப் பெரிய பலாப்பழம் இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் உள்ளது, இதன் எடை 240 கிலோ என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


வீடியோவில், மரத்தின் அடியில் இருக்கும் ஒரு ராட்சச பலாப் பழத்தை ஒரு கூட்டத்தினர் நகர்த்துவதையும், அங்கு உள்ள ஒரு பலகையில் கேகாலை என்று எழுதப்பட்டிருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.




உண்மை என்ன? 


“உலகின் மிகப் பெரிய பலாப்பழம் இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் உள்ளது, இதன் எடை 240 கிலோ” என்று பரவும் இதன் வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில், இது உண்மையான் வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


இது குறித்து அறிய பரவி வரும் செய்தி குறித்து சர்வதேச அளவில் ஏதாவது செய்தி வெளியிடப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்தோம். ஆனால் எந்த ஊடகங்களிலும் செய்தி வெளிவராததால், இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவா என்பதை உறுதிபடுத்த, “Hive Moderation” இணையதளத்தில் பரவி வரும் வீடியோவை பதிவேற்றி ஆய்வு செய்து பார்த்தோம். 



ஆய்வின் முடிவில் இது 98.6% AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் என்று உறுதிபடுத்தியது.  இதன் மூலம் இதன் உண்மைத் தன்மையை அறியாமல் பலரும் இதை சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.


முடிவு: 


நம் தேடலில், உலகின் மிகப் பெரிய பலாப்பழம் இலங்கையில் உள்ளதாகக் கூறி பரவும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க