YouTurn

நடுரோட்டில் குழந்தையைக் காப்பாற்றிய மயில் எனப் பரவும் AI வீடியோ!

நடுரோட்டில் குழந்தையைக் காப்பாற்றிய மயில் எனப் பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நடுரோட்டில் இருக்கும் குழந்தையை மயில் ஒன்று கார் விபத்திலிருந்து காப்பாற்றுவதைப் பாருங்கள் என்று கூறி பரவி வரும் இந்த வீடியோ போலியானது.

பரவிய செய்தி

நடுரோட்டில் ‌குழந்தை இருப்பதைப்  பார்த்து குழந்தையை பாதுகாத்து பத்திரமாக  ஓரத்தில் கொண்டு சேர்க்கும் மயில். வியக்க வைக்கும் அதிசியம். மயில் வாகனனே போற்றி  ஓம் முருகா.


X Link | Archive Link

விரிவான விளக்கம்

நடுரோட்டில் இருக்கும் குழந்தையை மயில் ஒன்று கார் விபத்திலிருந்து காப்பாற்றுவது போன்ற 53 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.


Content not available.


Content not available.


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில் இது உண்மையான வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


வீடியோவின் பல காட்சிகள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளுடன் காணப் படுகின்றன. சரியாக வீடியோவின் 37வது வினாடியில் குழந்தையின் தலையிலும், மயிலுக்கு இருப்பது போன்றே மயிலிறகு கொண்டை காணப்படுகிறது. 



இதே போன்று குழந்தையின் கால்களில், சரியாக வீடியோவின் 12 வது வினாடியில் காலில் சாக்ஸ் இருப்பது போன்றும், 25 வது வினாடியில் காலில் சாக்ஸ் இல்லாதது போன்றும் உள்ளது. மேலும் வீடியோவின் பின்புறம் உள்ள வீடுகள் பல காட்சிகளில் இயல்புக்கு மாறாக நகர்கின்றன


எனவே இது AI வீடியோ தானா என்பதை உறுதிபடுத்த wasitai இணையதளத்தில் வீடியோவின் காட்சிகளை பதிவேற்றி ஆய்வு செய்து பார்த்தோம். அப்போது இது “இந்தப் படம் அல்லது இதன் குறிப்பிடத்தக்க பகுதி, AI ஆல் உருவாக்கப்பட்டது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக உள்ளோம்” என்ற முடிவைக் காட்டியது. 



எனவே பரவி வரும் வீடியோ AI-ஆல் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


நம் தேடலில்,  நடுரோட்டில் இருக்கும் குழந்தையை மயில் ஒன்று கார் விபத்திலிருந்து காப்பாற்றுவதைப் பாருங்கள் என்று பரவி வரும் வீடியோ போலியானது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க