YouTurn

திமுக ஆட்சியில் மாணவிகள் மது அருந்துவதாகப் பரவும் 6 வருட பழைய வீடியோ!

திமுக ஆட்சியில் மாணவிகள் மது அருந்துவதாகப் பரவும் 6 வருட பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ நெல்லையில் எடுக்கப்பட்டதல்ல. 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரியலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. இதனை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

பொது வெளியில் மது அருந்தும் பள்ளி மாணவிகள்..!

image.png

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

நெல்லையில் பொது வெளியில் அமர்ந்து சீருடையில் மது அருந்தும் பள்ளி மாணவிகள் என்று கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும் அதில் பள்ளிக்கல்வித்துறையை முற்றிலும் சீர் அழித்த திமுக அரசு என்றும் பரப்பி வருகின்றனர். 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது விகடன் ஊடகத்தில் பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படத்துடன் பிப்ரவரி 20, 2020 அன்று, ”`காட்டுப்பகுதியில் மதுகுடிக்கும் மாணவிகள்!'- அரியலூர் சம்பவத்தால் அதிர்ந்த ஆசிரியர்கள்” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் மதுபாட்டில்களை வாங்கி வந்து ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்குச் சென்று அங்கு மூவர் ஒன்றாக உட்கார்ந்துகொண்டு மதுபானத்தை குடிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


மேலும் இது குறித்து தேடியப் போது, ”அரியலூர் பள்ளி மாணவிகள் மதுஅருந்தும் பழைய விடியோவை வலைதளத்தில் பதிவு செய்த பா‌ஜகஒன்றிய நிர்வாகி கைது” என்ற தலைப்பில் News Tamil 1 ஊடகத்தில் 28 ஜூலை, 2024 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் 2020ஆம் ஆண்டு அரியலூரில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோ அன்றைய காலக்கட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதே காட்சியை ‘திராவிடம் வளர்தெடுத்த பெரியாரின் பேத்திகள்’ என்று குறிப்பிட்டு பா‌ஜக ஒன்றிய நிர்வாகி முத்துகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அரியலூர் மாவட்ட திராவிட கழக மகளிர் அணி பொறுப்பாளர் மருவத்தூர் ராதிகா செந்தில்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  பா‌ஜக ஒன்றிய நிர்வாகி கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, பரவி வரும் வீடியோ நெல்லையில் எடுக்கப்பட்டதல்ல. 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரியலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. இதனை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க