உடலுறுப்பு தானத்தில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாடு!

உடலுறுப்பு தானம் தொடர்பாக அரசும் மருத்துவர்களும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக 2022ம் ஆண்டு உடல் உறுப்புக்களை தானம் செய்வதென்பது கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இது தொடர்பாகத் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு வெளியிட்ட தரவுகளை ஆராய்கையில், உறுப்பு தானத்தில் மற்ற மாநிலங்களுக்குத் தமிழ்நாடு முன்மாதிரியாக இருப்பதை அறிய முடிந்தது.
இந்தியாவில் 2022ம் ஆண்டு செய்யப்பட்ட 16,041 உறுப்பு தானத்தில் அதிகப்படியாக டெல்லியில் 3,818; தமிழ்நாட்டில் 2,245 தானங்களும் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்கள் வாரியாக பார்க்கையில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் எண்ணிக்கை என்பது ஒட்டு மொத்தத்தில் 14 சதவீதமாகும்.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் 1,476 சிறுநீரகங்களும் 632 கல்லீரலும் தானம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 243 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்தது. இதில் தமிழ்நாட்டின் பங்கு 85 (35%).
அதிக உடல் உறுப்பு தானம் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் முதல் 5 இடத்தில் தமிழ்நாட்டைத் தவிர்த்து தென்னிந்தியாவைச் சேர்ந்த கேரளா (1,472) மற்றும் தெலங்கானாவும் (1,179) இடம்பெற்றுள்ளது. அவை முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களில் உள்ளன. இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரா (1,525) உள்ளது .
[caption id="attachment_54894" align="aligncenter" width="856"]
NOTTO : National Organ & Tissue Transplant Organisation.[/caption]
இந்தியாவிலேயே இமாச்சல் பிரதேசம் (2), கோவா (3), உத்தரகண்ட் (4) மாநிலங்கள் மிகக் குறைந்த அளவே உறுப்பு தானம் செய்துள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உள்ள உத்தரப் பிரதேசத்தில் 233 (சிறுநீரகம் 225 + கல்லீரல் 8) உறுப்புகள் மட்டுமே தானம் செய்யப்பட்டுள்ளது (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி).
உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை :
2008ம் ஆண்டு மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் என்பவரது உடல் உறுப்புக்களை அவரது பெற்றோர் தானமாக வழங்கினர். ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்ட நாளான செப்டம்பர் 23ம் தேதியை உறுப்பு மாற்றுத் தினமாகத் தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு உறுப்பு மாற்று தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அறிவிப்பு இத்தானத்தை ஊக்குவிக்கும் முக்கியமான செயலாக உள்ளது. ‘இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்’ என்பதுதான் அது. இந்த அறிவிப்பிற்குப் பிறகு தமிழ்நாட்டில் முன்பைவிட உறுப்பு தானம் அதிகரித்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புபவர் குடும்பத்தினரின் சம்மதத்துடன் தமிழ்நாடு அரசின் உறுப்பு தானம் செய்யக்கூடிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது உறுப்பு தானம் செய்வதற்கான ஒரு விருப்ப பதிவு மட்டுமே. பதிவு செய்தவர் இறந்த பிறகோ அல்லது முடிவு எடுக்க முடியாத சூழ்நிலையிலோ (மூளைச்சாவு) அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்யச் சம்மதம் தெரிவிக்காத நிலையில் உறுப்புக்கள் பெறப்படாது. குடும்பத்தினரின் அனுமதியுடன் தான் உறுப்புகள் தானமாகப் பெறப்படும்.
அவ்வாறு பெறப்பட்ட உறுப்புகள் முறையான பயனாளிகளைச் சென்றடைய 2008ம் ஆண்டு உறுப்பு தானத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தொடங்கியது. இதன்படி தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக முன்னுரிமை வரிசைப்படி நோயாளிகளுக்கு வழங்கப்படும்.
Source :
NOTTO : National Organ & Tissue Transplant Organisation
இந்தியாவில் 2022ம் ஆண்டு செய்யப்பட்ட 16,041 உறுப்பு தானத்தில் அதிகப்படியாக டெல்லியில் 3,818; தமிழ்நாட்டில் 2,245 தானங்களும் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்கள் வாரியாக பார்க்கையில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் எண்ணிக்கை என்பது ஒட்டு மொத்தத்தில் 14 சதவீதமாகும்.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் 1,476 சிறுநீரகங்களும் 632 கல்லீரலும் தானம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 243 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்தது. இதில் தமிழ்நாட்டின் பங்கு 85 (35%).
அதிக உடல் உறுப்பு தானம் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் முதல் 5 இடத்தில் தமிழ்நாட்டைத் தவிர்த்து தென்னிந்தியாவைச் சேர்ந்த கேரளா (1,472) மற்றும் தெலங்கானாவும் (1,179) இடம்பெற்றுள்ளது. அவை முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களில் உள்ளன. இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரா (1,525) உள்ளது .
[caption id="attachment_54894" align="aligncenter" width="856"]
NOTTO : National Organ & Tissue Transplant Organisation.[/caption]இந்தியாவிலேயே இமாச்சல் பிரதேசம் (2), கோவா (3), உத்தரகண்ட் (4) மாநிலங்கள் மிகக் குறைந்த அளவே உறுப்பு தானம் செய்துள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உள்ள உத்தரப் பிரதேசத்தில் 233 (சிறுநீரகம் 225 + கல்லீரல் 8) உறுப்புகள் மட்டுமே தானம் செய்யப்பட்டுள்ளது (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி).
உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை :
2008ம் ஆண்டு மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் என்பவரது உடல் உறுப்புக்களை அவரது பெற்றோர் தானமாக வழங்கினர். ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்ட நாளான செப்டம்பர் 23ம் தேதியை உறுப்பு மாற்றுத் தினமாகத் தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு உறுப்பு மாற்று தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அறிவிப்பு இத்தானத்தை ஊக்குவிக்கும் முக்கியமான செயலாக உள்ளது. ‘இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்’ என்பதுதான் அது. இந்த அறிவிப்பிற்குப் பிறகு தமிழ்நாட்டில் முன்பைவிட உறுப்பு தானம் அதிகரித்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும்…
— M.K.Stalin (@mkstalin) September 23, 2023
உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புபவர் குடும்பத்தினரின் சம்மதத்துடன் தமிழ்நாடு அரசின் உறுப்பு தானம் செய்யக்கூடிய இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது உறுப்பு தானம் செய்வதற்கான ஒரு விருப்ப பதிவு மட்டுமே. பதிவு செய்தவர் இறந்த பிறகோ அல்லது முடிவு எடுக்க முடியாத சூழ்நிலையிலோ (மூளைச்சாவு) அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்யச் சம்மதம் தெரிவிக்காத நிலையில் உறுப்புக்கள் பெறப்படாது. குடும்பத்தினரின் அனுமதியுடன் தான் உறுப்புகள் தானமாகப் பெறப்படும்.
அவ்வாறு பெறப்பட்ட உறுப்புகள் முறையான பயனாளிகளைச் சென்றடைய 2008ம் ஆண்டு உறுப்பு தானத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தொடங்கியது. இதன்படி தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக முன்னுரிமை வரிசைப்படி நோயாளிகளுக்கு வழங்கப்படும்.
Source :
NOTTO : National Organ & Tissue Transplant Organisation