YouTurn

உபி-யில் "பெரியார் சிலையை" யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தாரா ?

உபி-யில் "பெரியார் சிலையை" யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சாமி சிலைன்னு நெனச்சு பெரியார் சிலையை திறந்து வச்சு சாமி கும்பிட்ட உ.பி முதல்வர் யோகி ஆதித்தியநாத்.



Twitter link

விரிவான விளக்கம்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரியார் சிலையை திறந்து வைத்ததாக இப்புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ?  

சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2022 ஜனவரி 7-ம் தேதி அவைத்யநாத் ஜி மகாராஜ் உடைய உருவச் சிலையை திறந்து வைத்துள்ளதாக " யோகி ஆதித்யநாத் உடைய ட்விட்டர் பக்கத்தில் அதே புகைப்படத்துடன் பதிவாகி இருக்கிறது.



Twitter link | Archive link



கோரக்பூர் மாவட்டத்தில் யோகி ஆதித்யநாத் தன்னுடைய அரசியல் குருவான மறைந்த அவைத்யநாத் மகாராஜ் உடைய திருஉருவச் சிலையை திறந்து வைத்ததோடு 1000 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கியதாக செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.
உபி முதல்வர் யோகி ஆத்யநாத் திறந்து வைத்த திருஉருவச் சிலை பார்ப்பதற்கு பெரியாரின் சிலையை போன்று இருப்பதாக சிலர் யோகி ஆதித்யநாத் பதிவில் கமெண்ட் செய்துள்ளதை பார்க்க முடிந்தது.

.

முடிவு : 

.

நம் தேடலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரியார் சிலையை திறந்து வைத்ததாக பரவும் தகவல் தவறானது. அந்த புகைப்படத்தில் இருப்பது அவைத்யநாத் மகாராஜ் உடைய திருஉருவச் சிலை என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க