YouTurn

மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் கல்லெறிந்ததில் கண்ணை இழந்த குழந்தையா ?

மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் கல்லெறிந்ததில் கண்ணை இழந்த குழந்தையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக முஸ்லீம் கும்பல் ரயில்களில் கற்களை ஏறிந்து தேசப்படுத்திய போது குழந்தை ஒற்றை கண்ணை இழந்ததாக இரத்த காயத்துடன் இருக்கும் குழந்தையின் புகைப்படத்தை இந்திய அளவில் பல மொழிகளில் பரப்பி வருகின்றனர். Facebook link உண்மை என்ன ? இந்திய அளவில்...

பரவிய செய்தி

மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் ரயிலில் கல்லெறிந்ததில் சிக்கி ஒற்றை கண்ணை இழந்த குழந்தை. இந்த குழந்தையை காயப்படுத்தியதற்கும் CAB எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம் ? மதத்தின் பெயரால் மனநோயாளிகளாக மாறாதீர்கள்.

விரிவான விளக்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக முஸ்லீம் கும்பல் ரயில்களில் கற்களை ஏறிந்து தேசப்படுத்திய போது குழந்தை ஒற்றை கண்ணை இழந்ததாக இரத்த காயத்துடன் இருக்கும் குழந்தையின் புகைப்படத்தை இந்திய அளவில் பல மொழிகளில் பரப்பி வருகின்றனர்.



Facebook link

உண்மை என்ன ? 

இந்திய அளவில் பகிரப்படும் பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், " 2016-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி ட்விட்டர்வாசி ஒருவர் பாதிக்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு,  சிரியாவைச் சேர்ந்த நகரமான அலெபோ பகுதி எனக் குறிப்பிட்டு இருக்கிறார் ".



Twitter link | archived link 

இதேபோல், 2016 முதல் 2017-களில் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இதே படம் பகிரப்பட்டு உள்ளது. ஆனால், குழந்தையுடைய புகைப்படத்தின் தொடக்கம் எங்கு இருந்து என்றும், குழந்தை குறித்த செய்திகளும் உறுதியாக கிடைக்கவில்லை.



Facebook link | archived link 

இருப்பினும், கண்ணை இழந்த குழந்தையின் புகைப்படம் 3 ஆண்டுகளுக்கு முன்பே ட்விட்டர் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி இருந்துள்ளது. அது இந்தியாவில் இல்லை என்றும் பல பதிவுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அந்த புகைப்படத்தை வைத்து மேற்கு வங்கத்தில் முஸ்லீம்களால் சேதப்படுத்தப்பட்ட ரயிலில் கண்ணை இழந்த குழந்தை என தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க : மேற்கு வங்கம் முஸ்லீம்களால் தாக்கப்பட்ட குழந்தையா ?| உண்மை அறிக.

இதற்கு முன்பாகவும் மேற்கு வங்கத்தில் முஸ்லீம்களால் தாக்கப்பட்ட குழந்தை என பங்களாதேஷ் நாட்டில் ரயில் விபத்தில் சிக்கிய குழந்தையின் புகைப்படத்தை தவறாக பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.