யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
"விஜய் இளம்ஜோடி காலில் விழுந்ததாக தகவல்" எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது. புதியதலைமுறை இது குறித்து நியூஸ்கார்டு எதுவும் வெளியிடவில்லை என்று உறுதிபடுத்தியுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதில் இறந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு அக்டோபர் 27 அன்று நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள அறைக்குள் தவெக தலைவர் விஜர் தவறுதலாக நுழைந்து அவர்கள் காலில் விழுந்ததால் சிறுது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக புதிய தலைமுறையின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
இது மட்டும் உண்மையா இருந்தால் இந்நேரம் சோக BGMஓட வீடியோ வெளிவந்திருக்கும்.. இன்னும் திருந்தவில்லையா @writersamas pic.twitter.com/vwaeAhjbni
உண்மை என்ன?
பரவி வரும் இந்த நியூஸ் கார்ட்டில் 28-10-2025 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இப்படி ஏதேனும் நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என அவர்களது அதிகாரப் பூர்வ பக்கங்களில் ஆய்வு செய்தோம். அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
மேலும் keywords கொண்டு இணையத்தில் தேடிய போதும், விஜய் இளம்ஜோடி காலில் விழுந்தது குறித்து எந்தவொரு செய்தி ஆதாரமும் கிடைக்கவில்லை.
மேலும் உறுதி செய்ய புதிய தலைமுறை ஊடகத்தை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டபோது, ‘இதுபோன்ற செய்தி எதையும் நாங்கள் வெளியிடவில்லை’ என்று கூறினர்.
இதையடுத்து புதியதலைமுறை ஊடகப்பக்கத்தில் அக்டோபர் 28ஆம் தேதி, பரவி வரும் நியூஸ் கார்ட் போலியானது என்றும், இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
#FakeAlert | இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை pic.twitter.com/f6kB1sMZIX
முடிவு:
எனவே, "விஜய் இளம்ஜோடி காலில் விழுந்ததாக தகவல்" எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது. புதியதலைமுறை இது குறித்து நியூஸ்கார்டு எதுவும் வெளியிடவில்லை என்று உறுதிபடுத்தியுள்ளது.
