யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பொழுதுபோக்கு மற்றும் சமூக விழிப்புணர்வு நோக்கங்களுக்காக எடுக்கப்பட்ட வீடியோவை உண்மையான வீடியோ என நினைத்து தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்தியாவில் செயற்கை மாம்பழங்கள் தயாரிக்கப்படுவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் ஒருவர் மாம்பழத்தின் உள்ளே சிரஞ்சி பயன்படுத்தி மஞ்சள் நிற திரவத்தை பழத்தின் உள்ளே செலுத்துவதையும், வீடியோவில் காட்டப்படும் நபர் முகத்தை மூடி இருப்பதையும் காண முடிகிறது.

உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோவை நன்கு ஆய்வு செய்ததில், வீடியோவின் மேற்புறத்தில், "இந்த வீடியோ முழுக்க முழுக்க கற்பனையே. வீடியோவில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் சித்தரிக்கப்பட்டவை மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்டவை. இது இந்த மாதிரியான எந்த வகையான செயல்பாட்டையும் அல்லது எந்த வகையான சடங்குகளையும் ஊக்குவிக்கவில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தன.
மேலும் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், அதன் முழு வீடியோ 'The social media junction' என்ற யூடியூப் பக்கத்தில் மாம்பழம் சாப்பிடுபவர்கள் ஜாக்கிரதை! எனக் குறிப்பிட்டு, கடந்த ஜுன் 21, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

இந்த யூடியூப் பக்கத்தின் முகப்பிலும் (BIO), "என்னுடைய சேனலுக்கு வரவேற்கிறோம். எனது சேனலில் பொழுதுபோக்கு மற்றும் சமூக விழிப்புணர்வு வீடியோக்களை நீங்கள் பெறலாம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்று, தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டு இதற்கு முன்பே வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து, அவையும் போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் என்று குறிப்பிட்டு நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
மேலும் படிக்க: Video of a young boy injecting colour and sweetener into watermelons is scripted!
முடிவு:
நம் தேடலில், மாம்பழத்தில் செயற்கை ரசாயன திரவம் செலுத்துவதாகப் பரவும் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.
