YouTurn

பள்ளி மாணவிகளை கால்களை மஜாஜ் செய்ய வைத்த ஆசிரியை! தமிழ்நாட்டில் நடந்ததா?

பள்ளி மாணவிகளை கால்களை மஜாஜ் செய்ய வைத்த ஆசிரியை! தமிழ்நாட்டில் நடந்ததா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தச் சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் பண்டப்பள்ளி பழங்குடி நலப் பள்ளியில் நடந்தது.

பரவிய செய்தி

பள்ளி மாணவிகளைக் கொண்டு தனது கால்களை மஜாஜ் செய்ய வைத்த ஆசிரியை.


Facebook Link 

விரிவான விளக்கம்

வகுப்பறையில் ஆசிரியை நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். பள்ளிச் சீருடை அணிந்த மாணவிகள் அவரின் கால்களுக்கு மஜாஜ் செய்துகொண்டிருக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவின் கீழ் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாக எண்ணி பலரும் பின்னூட்டங்கள் (comments) எழுதியுள்ளனர்.



உண்மை என்ன? 


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’INDIA TODAY’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், இந்தச் சம்பவம்  ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பண்டப்பள்ளி பழங்குடி நலப் பள்ளியில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும், இது தொடர்பாக ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனத்தின் (ITDA) அதிகாரி அந்த ஆசிரியைக்கு show-cause notice கொடுத்து, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை அந்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடந்தது என்பது உறுதியாகிறது.


முடிவு:


ஆந்திர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவிகளைக் கொண்டு கால்களை மஜாஜ் செய்ய வைத்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக திரித்துப் பரப்புகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.