YouTurn

‘முருகன் கோவில் வாசலில் அசைவ விருந்து’ என திரித்துப் பரப்பப்படும் தவறான வீடியோ!

‘முருகன் கோவில் வாசலில் அசைவ விருந்து’ என திரித்துப் பரப்பப்படும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

சென்னை புதுப்பேட்டையில் உள்ள நாராயண நாயக்கன் தெருவில் புதுப்பேட்டை பள்ளிவாசலும், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவிலும் அருகருகே அமைந்துள்ளதை கூகுள் வரைபடத்தில் தெளிவாக காண முடிகிறது.

பரவிய செய்தி

முருகன் கோவில் வாசலில் அசைவ உணவு விருந்து நடத்தி களங்கப்படுத்திய புதுப்பேட்டை முஸ்லீம்கள். இவனுங்க வேணும்ன்னு தான் இந்த கொழுப்பெடுத்த வேலையை செய்யறானுங்க. கலவரம் செய்து அமைதியை குலைக்க இந்த ஏற்பாடு.



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

சென்னை புதுப்பேட்டை முருகன் கோவில் வாசலில் இஸ்லாமியர்கள் அசைவ விருந்து நடத்துவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வரிசையாக அமர்ந்து இரவு உணவு சாப்பிடுவதை தெளிவாகக் காண முடிகிறது.




உண்மை என்ன?


பரவி வரும் வீடியோவில் "முருகன் கோவில், நாராயண நாயக்கன் தெரு" என்று குறிப்பிட்டிருந்ததால் அது குறித்து கூகுள் வரைபடத்தில் (Google Map) ஆய்வு செய்தோம். 



அதன்படி, சென்னை புதுப்பேட்டையில் உள்ள நாராயண நாயக்கன் தெருவில் புதுப்பேட்டை பள்ளிவாசலும், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவிலும் அருகருகே அமைந்துள்ளதை கூகுள் வரைபடத்தில் தெளிவாகக் காண முடிந்தது.



மேலும் புதுப்பேட்டை பள்ளிவாசல் என்று குறிப்பிட்டும் கூகுள் வரைபடத்தில் தேடினோம். அதன்படி அதில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களில், பள்ளிவாசல் அருகே கோவில் அமைந்துள்ள புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் இரண்டும் அருகருகே அமைந்துள்ளதை உறுதி செய்ய முடிகிறது.



இந்நிலையில் புதுப்பேட்டை பள்ளிவாசல் அருகே இஸ்லாமியர்கள் நோன்பு துறந்ததை, இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் நோக்கில் கோவில் வாசலில் அசைவு உணவு சாப்பிடுவதாகக் கூறி தவறாகத் திரித்து பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில் சென்னை புதுப்பேட்டையில் உள்ள நாராயண நாயக்கன் தெருவில் புதுப்பேட்டை பள்ளிவாசலும், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவிலும் அருகருகே அமைந்துள்ளதை தெளிவாக அறிய முடிகிறது. இந்நிலையில் வகுப்புவாதத்தை தூண்டும் நோக்கில் தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க