YouTurn

இந்துகள் வழிப்பட்டதற்காக ஆலமரம் அறுக்கப்பட்டதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

இந்துகள் வழிப்பட்டதற்காக ஆலமரம் அறுக்கப்பட்டதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆலமரத்தில் சடங்குகள் செய்து சிலர் வழிபட்டதால், இது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று கூறி உள்ளூர் இமாம்கள் இந்த மரத்தை அறுத்துள்ளனர்.

பரவிய செய்தி

பங்களாதேஷ் மதரிபுரில் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் மரத்தை இந்துக்கள் வழிபடுவதாகக் கூறி மரத்தை அறுக்கும் முக்கா பயலுக


 Link / Archive Link 

விரிவான விளக்கம்

இஸ்லாமிய அடையாளத்துடன் இருக்கும் நபர்கள் சிலர் ஆலமரம் ஒன்றை அறுக்கும் வீடியோவை பதிவிட்டு, இந்த சம்பவம் பங்களாதேஷ் நாட்டில் உள்ள மதரிபூரில் நடந்ததாகவும், இந்துக்கள் இந்த மரத்தை வழிபடுவதாகக் கூறி 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இந்த மரத்தை இஸ்லாமியர்கள் அறுத்ததாகவும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?

 

பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe- களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், ‘Dhaka Tribune’ என்ற செய்தித்தளத்தில் இது குறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.


 

வங்கதேசத்தில் மாதரிப்பூர் என்னும் பகுதியில் உள்ள 200 ஆண்டு பழைமையான ஆலமரம் இருந்திருக்கிறது. அதற்கு 'தெய்விக சக்தி' இருப்பதாக கூறி சிலர் மெழுகுவர்த்தி ஏற்றி சடங்குகள் செய்து வழிபாடு செய்திருக்கிறார்கள். இவ்வாறு சடங்கு செய்து வழிபாடு செய்வது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று கூறி உள்ளூர் இமாம்கள் எதிர்த்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக இந்த மரத்தை இஸ்லாமிய மத ஆர்வலர்களும் உள்ளூர் இமாம்களும் சேர்ந்து அறுத்துள்ளார்கள் என்று செய்தியின் மூலம் தெரிய வருகிறது.

 

மேலும், ‘The Business Standard’ செய்தித்தளத்திலும் இதே செய்தி வெளியாகியுள்ளது. அதிலும், இந்துக்கள் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக எந்த தகவலும் இல்லை.


 

முடிவு:

 

ஆலமரத்தில் வழிபாடு செய்வது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று கூறி உள்ளூர் இமாம்கள் இந்த மரத்தை  அறுத்துள்ளார்கள். இதனை திரித்து இந்துகள் வழிபட்டதால் மரம் அறுக்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க