
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter link | Archive link
விரிவான விளக்கம்

உண்மை என்ன ?
திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தாரா எனத் தேடுகையில் அப்படியொரு செய்தி எங்கும் வெளியாகவில்லை. அது பரபரப்பான செய்திகளுக்கும், விவாதத்திற்கும் வித்திட்டு இருக்கும்.
Facebook link
ஆகையால், புதிய தலைமுறை செய்தியின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், காவல்துறையின் போக்கை கண்டித்து செப்டம்பர் 29ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம். சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கொடியை ஏற்றிய 15 பேர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்- விசிக தலைவர் திருமாவளவன் " என செப்டம்பர் 25-ம் தேதி அதே புகைப்படத்துடன் நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.
#மோரூர்_கொடியேற்றத்_தடை: செப்-30 சேலத்திலும்
அக்-01 மதுரையிலும் நடைபெறவிருந்த விசிக ஆர்ப்பாட்டங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன.
தனது இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடித்து சென்னைக்குத் திரும்பியதும் முதல்வர் @mkstalin அவர்கள் நேரில் பேச அழைத்திருப்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது. pic.twitter.com/nKhgVXrYC3
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 29, 2021
Twitter link
செப்டம்பர் 29-ம் தேதி எம்.பி திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில், " மோரூர் கொடியேற்றத் தடை: செப்-30 சேலத்திலும் அக்-01 மதுரையிலும் நடைபெறவிருந்த விசிக ஆர்ப்பாட்டங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன. தனது இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடித்து சென்னைக்குத் திரும்பியதும் முதல்வர் @mkstalin அவர்கள் நேரில் பேச அழைத்திருப்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது " எனப் பதிவிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 29ம் தேதி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் என திருமாவளவன் கூறியதால் அதை எடிட் செய்து திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக போலியான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், கனத்த மன வேதனையுடன் திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் என திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.