YouTurn

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்டதாக பரவும் வீடியோ| உண்மை என்ன ?

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்டதாக பரவும் வீடியோ| உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

புதுப்பிக்கப்பட்ட வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில்..



Facebook link

விரிவான விளக்கம்

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்ட பிறகு கோவிலின் தோற்றம் என 2.47 நிமிட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. இந்த வீடியோ இந்திய அளவில் வைரலாகும் ஒன்றாக இருக்கிறது.



உண்மை என்ன ?

வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்டதாக பரவும் வீடியோ குறித்து தேடுகையில், 2020 மே மாதம் பிளான்னர் இந்தியா எனும் யூடியூப் சேனல் ஒன்றில் வாரணாசியில் மணி மந்திர் எனும் கோவில் பணிகள் சமீபத்தில் முடிவடைந்ததாக இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.



2020 பிப்ரவரி 24-ம் தேதி ZNDM News எனும் யூடியூப் சேனலில் இதே கோவிலின் மற்றொரு வீடியோ வெளியாகி இருக்கிறது.



பிளான்னர் இந்தியா எனும் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், வாரணாசியில் உள்ள மணி மந்திர் கோவில் பிளான்னர் இந்தியாவால் வடிவமைக்கப்பட்டது. இது புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் என பொய்யான செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது " என ஜூன் 2-ம் தேதி பதிவிட்டு உள்ளனர்.



Twitter Archive link 

முடிவு :

நம் தேடலில், புதுப்பிக்கப்பட்ட வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில் என பரவும் 2.47 நிமிட வீடியோ வாரணாசியில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட மணி மந்திர் எனும் கோவில் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க