YouTurn

கடலில் சென்று கலக்காத ஒரே ஆறு ”வைகை ஆறு” என்று பரவும் தகவல்! உண்மை என்ன?

கடலில் சென்று கலக்காத ஒரே ஆறு ”வைகை ஆறு” என்று பரவும் தகவல்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வைகை ஆறு, வருச நாடு பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்கு சரிவில் உருவாகி, கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் பாய்ந்து இறுதியாக வங்காள விரி குடாவில் கலக்கிறது

பரவிய செய்தி

மாபெரும் மகிழ்ச்சிக்குரிய.பெருமைக்குரிய. மதுரை வைகை ஆறு வரலாறு.

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

வைகை ஆறு குறித்து 50 விநாடிகள் கொண்ட காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் எல்லா ஆறுகளும் கடலில் கலக்கும் என்றும், வைகை ஆறு மட்டும் கடலில் கலக்காது நிலப்பரப்பிலேயே முடிந்துவிடும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்தோம். அப்போது National Water Mission இணையதளப்பக்கத்தில் Vaigai Basin என்ற PDF கோப்பு ஒன்று கிடைத்தது. அதில் வைகை ஆற்றுப் படுக்கை சுமார் 7009.13 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது என்றும், மலைப்பாங்கான பகுதி 2,101.68 சதுர கி.மீ வரை நீண்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நிலப்பரப்பிலேயே முடிந்துவிடாது என்பது தெரியவந்தது. 


இது குறித்து மேலும் அதில் தேடிப் பார்த்தோம். அப்போது வைகை ஆறு, வருச நாடு பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்கு சரிவில் உருவாகி, கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் பாய்ந்து இறுதியாக வங்காள விரி குடாவில் கலக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


எனவே வைகை ஆறு மட்டும் கடலில் கலக்காமல் நிலத்திலேயே சேர்ந்து விடுவதாகத் தவறான தகவலைப் பரப்பி வருவது தெரியவந்தது. 


முடிவு : 

நம் தேடலில், “கடலில் சென்று கலக்காத ஒரே ஆறு என்றால் அது வைகை ஆறு தான்” என்று கூறி பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க