YouTurn

மோடி குறித்து அவதூறு பரப்பிய சென்னையைச் சேர்ந்தவரை உ.பி. காவல்துறை கைது செய்தனரா? உண்மை என்ன?

மோடி குறித்து அவதூறு பரப்பிய சென்னையைச் சேர்ந்தவரை உ.பி. காவல்துறை கைது செய்தனரா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மன்மோகன் மிஸ்ரா என்ற அந்நபர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் கிடையாது. மேலும் தமிழ்நாடு காவல் துறையின் ஒத்துழைப்புடன் தான் அந்நபர் கைது செய்யப்பட்டு உ.பி. அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பரவிய செய்தி

பிரதமர் மோடி குறித்து அவதூறு சென்னை நபரைத் தட்டி தூக்கிய உத்தரபிரதேச போலீசார்! பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய நபரை, சென்னையில் வீடு புகுந்து உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்தனர்.

image.png

X link

விரிவான விளக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் குறித்து சென்னையைச் சேர்ந்தவர் அவதூறாகப் பேசி வீடியோ பதிவிட்டதாகவும் அவரை உத்தரப்பிரதேச காவல் துறை சென்னைக்கு வந்து வீடு புகுந்து கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதாகவும் ஒரு நியூஸ் கார்டு பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?


பரவக் கூடிய நியூஸ் கார்டில் ‘ஒரே தேசம்’ என்கிற லோகோ இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், தேதி குறிப்பிடப்படவில்லை. எனவே அதிலுள்ள வார்த்தைகளைக் கொண்டு தேடியதில், இது 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான செய்தி என்பதை அறிய முடிந்தது. 

image.png

சென்னையில் வசித்து வந்த மன்மோகன் மிஸ்ரா என்பவர் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் குறித்து இந்தியில் அவதூறாகப் பேசி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக  உத்தரப்பிரதேச மாநிலம் கொட்வாளி காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்தனர். 


இதனையடுத்து அவரை கைது செய்ய உத்தரப்பிரதேச காவல்துறை சென்னை வந்தனர். அப்படி வரும் போது அப்போதைய தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை சந்தித்து அனுமதியும் உதவியும் கோரியதுடன், கைது செய்யப்பட்ட மன்மோகன் மிஸ்ரா மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகே உத்தரப்பிரதேசம் அழைத்துச் சென்றுள்ளனர். இக்கைது பற்றி 2021, ஆகஸ்ட் மாதமே ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

image.png

இவற்றிலிருந்து பரவக் கூடிய இச்சம்பவம் தற்போது நடந்ததில்லை என்பதும், தமிழ்நாட்டுக் காவல் துறையின் ஒத்துழைப்போடுதான் கைது சம்பவம் நடந்துள்ளது என்பதும் தெளிவாகிறது. மேலும் கைது செய்யப்பட்டவர் சென்னையில் வசித்து மட்டுமே வந்துள்ளார். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் அல்ல.


முடிவு: 


மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாகப் பேசியவரை உத்தரப்பிரதேச காவல் துறை சென்னையில் கைது செய்த சம்பவம் 2021ம் ஆண்டு நிகழ்ந்தது. மன்மோகன் மிஸ்ரா என்ற அவர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் கிடையாது. மேலும் தமிழ்நாடு காவல் துறையின் ஒத்துழைப்புடன் தான் அந்நபர் கைது செய்யப்பட்டு உ.பி. அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.