YouTurn

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா வார்டை மாடு பார்வையிட்டதா ?

உத்தரப் பிரதேசத்தில் கொரோனா வார்டை மாடு பார்வையிட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உத்திரபிரதேச அமைச்சர் கொரோனா வார்டை பார்வையிடுகிறார்.



Facebook linkArchive link 

விரிவான விளக்கம்

உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பசுக்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பதாக அதை வைத்து பல்வேறு விமர்சனங்களும், ட்ரோல்களும் சமூக வலைதளங்களில் செய்யப்படுவதுண்டு.



Facebook link 

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கொரோனா வார்டில் மாடு ஒன்று சுற்றி பார்வையிடுவதாக 18 நொடிகள் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை வைத்தும் ட்ரோல் பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

உண்மை என்ன ?

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள் சிகிச்சை பெற்று இருக்கும் சூழ்நிலையில், வைரலாகும் வீடியோவில் நோயாளிகளே காணவில்லை. ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர்.



கீ வார்த்தைகளை கொண்டு வீடியோ குறித்து தேடுகையில், 11 நாட்களுக்கு முன்பாக Tuko news எனும் கென்யா நாட்டின் செய்தி இணையதளம் ஒன்றில் இவ்வீடியோ பதிவிட்டு இருக்கிறார்கள். ஆனால், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் அளிக்கப்படவில்லை. மாறாக, Aproko Doctor என்பவர் இவ்வீடியோவை பதிவிட்டதாக இடம்பெற்று இருக்கிறது.



Twitter link | Archive link 

1 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட Aproko Doctor பிரபல நைஜீரியன் மருத்துவர். அவர் TedX Speaker என ட்விட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார். அவருடைய பதிவிலும் எந்த பகுதியில் வீடியோ எடுக்கப்பட்டது எனக் குறிப்பிடவில்லை.

naija2day எனும் இணையதளத்தில், மருத்துவமனை வார்டில் மாடு நுழைந்த வீடியோ நைஜீரிய மக்களால் அதிகம் வைரல் செய்யப்படுவதாகவும், ஆனால் வீடியோ எடுக்கப்பட்ட இடம் எங்கு என உறுதியாக தெரியவில்லை எனக் குறிப்பிட்டு உள்ளனர். நைஜீரியாவை சேர்ந்த The Republican News எனும் முகநூல் பக்கத்திலும் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.

மருத்துவமனை வார்டில் மாடு நுழையும் வீடியோ 10 நாட்களுக்கு முன்பாக நைஜீரியா நாட்டில் அதிகம் வைரலாகி இருக்கிறது. எனினும், வீடியோ எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இந்தியா இல்லை எனத் தெளிவாய் தெரிகிறது. இவ்வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதாக செய்தியோ, பிற அதிகாரப்பூர்வ பதிவுகளோ இல்லை.

முடிவு :

நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தில் கொரோனா வார்டில் மாடு நுழைந்ததாக பரப்பப்படும் வீடியோ இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க