YouTurn

ஒன்றிய அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி வழங்குவதாக வதந்தி !

ஒன்றிய அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி வழங்குவதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நமது மத்திய அரசானது கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ரூ 4 லட்சம் நிதி உதவி வழங்கிக் கொண்டு உள்ளது. அதற்கான படிவத்தை இதனுடன் இணைத்து உள்ளேன். நமக்கு தெரிந்த உறவுகள் யாரேனும் கொரானா பாதிக்கப்பட்டு உயிர் இழக்க நேர்ந்திருந்தால் அவர்களின் குடும்பத்திற்கு இந்த நிதியானது பெரும் உதவியாக இருக்கும். தயவு செய்து அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்பு இன்னும் நீங்கியபாடில்லை. அதற்குள் மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.4 லட்சம் நிதி உதவித் தொகை வழங்குவதாகவும், அதற்கான படிவம் இது என இப்பதிவை  சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.





உண்மை என்ன ? 

சமீபத்தில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பு நிதியாக வழங்கப்படும். அந்த வைப்பு நிதியில் இருந்து மாதந்தோறும் ஊக்கத் தொகை அளிக்கப்பட்டு 23வது வயதில் முதிர்வு தொகை அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தரப்பில் செய்தி அறிக்கை வெளியானது. இதேபோல், தமிழக அரசும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்தது.

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் SDRF கீழ் நிதி அளிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இப்படி பரவும் தகவலை அரசின் அதிகாரப்பூர்வ PIB ட்விட்டர் பக்கத்தில் வைரலாகும் படிவத்துடன் பரவும் தகவல் வதந்தி எனக் கூறப்பட்டுள்ளது.



Twitter link

ஒரு பதிவில், வைரல் செய்யப்படும் படிவத்துடன் SDRF பற்றியும், இழப்பீடு நிதி வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை போன்ற பக்கமும் இணைக்கப்பட்டு இருந்தது.



அது குறித்து தேடுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்த உள்துறை அமைச்சகம் சில மணி நேரங்களில் அதை நீக்கி விட்டு புதிய அறிக்கையை வெளியிட்டதாக 2020 மார்ச் மாதம் தி பிரிண்ட், பிசினஸ் லைன் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.



Twitter link 

முடிவு :

நம் தேடலில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இந்திய ஒன்றிய அரசு SDRF கீழ் 4 லட்சம் நிதி அளிப்பதாக வைரல் செய்யப்படும் தகவல் தவறானது. ஒன்றிய அரசு தரப்பில் அப்படி எந்தவொரு நிதியும் அளிக்கப்படவில்லை என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க