YouTurn

“ ஜெய் ஸ்ரீ ராம் ” என்று கூறி உரையைத் தொடங்கியது அமீரகத்தின் இளவரசரா ?

“ ஜெய் ஸ்ரீ ராம் ” என்று கூறி உரையைத் தொடங்கியது அமீரகத்தின் இளவரசரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பிரதமர் மோடி அபுதாபியில் கட்டப்பட உள்ள இந்து கோவிலுக்கு பிப்ரவரி 11-ம் தேதி அடிக்கல் நாட்டினார். அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்நிகழ்ச்சி கருதப்பட்டது. இந்நிலையில், அமீரகத்தின் பட்டத்து இளவரசர் நிகழ்ச்சி ஒன்றில் “ ஜெய் ஸ்ரீ ராம் ”...

பரவிய செய்தி

“ ஜெய் ஸ்ரீ ராம் ” என்று தன் உரையை ஆரம்பித்தார் ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர்.

விரிவான விளக்கம்

பிரதமர் மோடி அபுதாபியில் கட்டப்பட உள்ள இந்து கோவிலுக்கு பிப்ரவரி 11-ம் தேதி அடிக்கல் நாட்டினார். அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்நிகழ்ச்சி கருதப்பட்டது.



இந்நிலையில், அமீரகத்தின் பட்டத்து இளவரசர் நிகழ்ச்சி ஒன்றில் “ ஜெய் ஸ்ரீ ராம் ” என்றுக் கூறி தன் உரையைத் தொடங்கியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதே போன்று இந்தியாவின் பிரபல பத்திரிகையான டைம்ஸ் நொவ் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ அமீரகத்தின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சயித் அல் நய்ஹான் அபுதாபியில் மொராரி பாபு தலைமையில் நடைபெற்ற ராம் கதா என்ற நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் “ ஜெய் ஸ்ரீ ராம் ” என்றுக் கூறி தன் உரையைத் தொடங்கியதாகக் கூறி பதிவிடப்பட்டது. மேலும், அதே பக்கத்தில் 8 மணி நேரத்திற்கு பிறகு அதே பதிவு மறுப்பதிவு செய்யப்பட்டது. 



அமீரகத்தின் பட்டத்து இளவரசர் “ ஜெய் ஸ்ரீ ராம் “ என்று உரையை ஆரம்பித்தார் என்று சமூக வலைத்தளத்திலும், பத்திரிகையில் கூறியதும் உண்மையல்லவே. வைரலாகிய வீடியோவில் இருப்பவர் அரபு நாட்டின் இளவரசர் அல்ல, சுல்தான் அல் காஸ்ஸாமி என்பவர் ஆவார். இந்த வீடியோ காட்சியானது பிரதமர் மோடி அமீரகம் செல்வதற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு செப்டம்பரில் அபுதாபியில் மொராரி பாபு தலைமையில் நடைபெற்ற ராம் கதா என்ற இந்து பிராத்தனை நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அரபு நாட்டைச் சேர்ந்த கட்டுரையாளர் மற்றும் அரபு நாட்டின் விவகாரங்கள் குறித்து உரையாற்றுபவரான சுல்தான் அல் கஸ்ஸாமி “ ஜெய் ஸ்ரீ ராம் ” என்று கூறியிருப்பார். அந்த வீடியோவை காண ..



2014-ல் சுல்தான் அல் கஸ்ஸாமி MIT LAB MEDIA நிர்வாகத்தின் அங்கத்தினராக இருந்த போது, உலகளவில் அரபைச் சேர்ந்த சிறந்த 100 சிந்தனையாளர்களின் பட்டியலில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தவறான செய்திகள் பரவுவது ஒன்றும் புதிதல்ல, எனினும் பிரலமான பத்திரிகையிலேயே, வேறு ஒரு நிகழ்ச்சியுடன் தவறான செய்தியை பதிவிடுவதால் உண்மை என்று நினைத்து மக்களும் அதிகம் பகிரத் தொடங்கியுள்ளனர்.

சுருக்கமாக

2016-ல் நடைபெற்ற இந்து பிராத்தனை நிகழ்ச்சியில், அரபு நாட்டின் முக்கிய அரசியல் சார்ந்து உரையாற்றுபவரான சுல்தான் அல் கஸ்ஸாமி உரையாற்றியதை அரபு இளவரசர் என்ற தவறான தகவல்களாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க