யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒரே நடைமேடையில் நிற்பதற்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணியே காரணம். இதன் உண்மைத் தன்மை அறியாமல் தவறான தகவலை திரித்துப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
திமுக ஆட்சியில் பாருங்க சென்னை சேத்துப்பட்டு ரெண்டு ரயிலும் ஒரே தாண்டவத்துல விடுறாங்க. அந்த அளவுக்கு இருக்கு இந்த அரசு. யார் செத்துப்போன நமக்கு என்ன நம்ப கொள்ளை அடிச்சு தமிழ்நாட்டை நாசம் ஆக்கணும்.
விரிவான விளக்கம்
"சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ஒரே நடைமேடையில் இரண்டு மின்சார ரயில்கள் எதிர் எதிரே நிற்கிறது. இந்த அளவுக்கு இந்த திமுக அரசு இருக்கிறது" என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் இரண்டு ரயில்கள் ஒரே நடைமேடையில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சியை ஒருவர் வீடியோ எடுப்பது போன்றும் உள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் ஆய்வு செய்து பார்த்தோம்.
அதன்படி, “சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, நடைமேடை 10 மற்றும் 11-ல் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் பிப்ரவரி 20-ம் தேதி நள்ளிரவு முதல் ஏப். 5-ம் தேதி நள்ளிரவு வரை நடைமேடை 5 மற்றும் 6-ல் இருந்து இயக்கப்படும் எனவும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார விரைவு ரயில்கள் 6-வது நடைமேடையிலும், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் 5-வது நடைமேடையிலும் இயக்கப்படும். இந்த 45 நாட்களிலும் தற்காலிக அட்டவணைப்படி மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும்” எனவும் தெற்கு ரயில்வே (சென்னை கோட்டம்) அறிவித்துள்ளது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
மேலும் இது குறித்து பல்வேறு ஊடகங்களில் "சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக மேலும் 49 புறநகர் ரயில் சேவைகள் இன்றுமுதல் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டு செய்தியாக வெளியிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.
மேலும் இந்திய ரயில்வே துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டு மின்சார ரயில்கள் ஒரே நடைமேடையில் நிறுத்தப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு தான் காரணம் என்றும் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒரே நடைமேடையில் நிற்பதற்கான காரணம் எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணியே என்ற உண்மைத் தன்மை அறியாமல் தவறான தகவலை பலரும் திரித்துப் பரப்பி வருகின்றனர்.