YouTurn

பெண்கள் பாதுக்காப்பிற்காக முதல்முறையாக டிரோன்களை பயன்படுத்தவிருப்பது தவெக அரசா?

பெண்கள் பாதுக்காப்பிற்காக முதல்முறையாக டிரோன்களை பயன்படுத்தவிருப்பது தவெக அரசா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

காவல்துறை ரோந்துப் பணிக்காக டிரோன்களை பயன்படுத்துவதும், பெண்கள் பாதுகாப்பிற்காக டிரோன் கண்காணிப்பு பயன்படுத்தப்படுவதும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.

பரவிய செய்தி

இந்தியாவில் முதன்முதலாக பெண்கள் பாதுகாப்பிற்காக டிரோன் மூலம் ரோந்து செய்யும் முறை தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.


image.png


X Link / Archive Link


image.png


Threads Link 


விரிவான விளக்கம்

ஜூன் 9ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்து நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட ‘சிங்க பெண்’ சிறப்பு படை திட்டத்தை தொடங்கி வைத்தார். 


அந்நிகழ்வில் பேசிய முதல்வர் விஜய், ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக இந்தியாவிலே முதன்முதலாக டிரோன் மூலம் ரோந்து செய்யும் முறை தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் அறிமுகப்படும்’ என்று அறிவித்தார். இதனை தவெக ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். 




உண்மை என்ன?


காவல்துறையில் டிரோன் மூலம் கண்காணிப்பு (ரோந்து) செய்வது குறித்த செய்திகளை இணையத்தில் தேடினோம். 



‘The Indian Express’ செய்தித்தளத்தில் 2023 ஜூன் மாதம் வெளியான செய்தி ஒன்றில், ‘இந்தியாவிலே முதன்முறையாக சென்னை மாநகர காவல்துறை சார்பில் ‘டிரோன் காவல் படை (Drone Police Unit)’ அமைக்கப்பட்டுள்ளதாக' குறிப்பிடப்பட்டுள்ளது. இது நகரத்தை பருந்துப் பார்வையில் கண்காணிக்க போலீஸாருக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 


image.png


இதேபோல் 2026 ஏப்ரல் மாதம் ‘The Hindu' செய்தித்தளத்தில் வெளியான செய்தியின் படி, ‘தெற்கு இரயில்வே ஹைதராபாத் மண்டலத்தின் கீழ் இயங்கும் இரயில்வே பாதுகாப்பு படை (RPF), ‘Pink Patrol’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஹைதராபாத் நகரத்தில் இயங்கும் புறநகர் இரயில்களில் கண்காணிப்பு பணிக்காக டிரோன் பயன்படுத்தப்படும் என்றும் இந்த டிரோன்கள் பெண் காவலர்களால் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, காவல்துறை ரோந்துப் பணிக்காக டிரோன்களை பயன்படுத்துவதும், பெண்கள் பாதுகாப்பிற்காக டிரோன் கண்காணிப்பு பயன்படுத்தப்படுவதும் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தெரிய வருகிறது. 


முடிவு: 


பெண்கள் பாதுகாப்பிற்காக டிரோன் கண்காணிப்பு பயன்படுத்தப்படுவது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான் என்பதை மறைத்து, தவெக அரசுதான் இந்தியாவிலே முதன்முறையாக அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போவதாக தவறாக பரப்பப்படுகிறது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க