YouTurn

சுனாமியில் பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளை எஸ்.ஐ ஆக்கிய ஆசிரியர் !

சுனாமியில் பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளை எஸ்.ஐ ஆக்கிய ஆசிரியர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடலூர் மாவட்டத்தில் சுனாமியில் பாதிக்கப்பட்ட மீனவக் குப்பங்களில் ஒன்றான புதுக்குப்பத்தில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய், தந்தையரை இழந்து செய்வதறியாது இருந்தனர். இதில், உண்ண உணவும், ஆதரவும் இன்றி கண்ணீருடன் தவித்த ஐந்து சிறுமிகளை கண்டு மனம் நொடிந்து போனார் மாரியப்பன். மாரியப்பன் ஒரு...

பரவிய செய்தி

கடலூரில் சுனாமியால் பெற்றோரை இழந்து அனாதை ஆன 5 சிறுமிகளை எஸ்ஐ ஆக்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் ! வாழ்த்துக்கள் ஐயா...

விரிவான விளக்கம்

கடலூர் மாவட்டத்தில் சுனாமியில் பாதிக்கப்பட்ட மீனவக் குப்பங்களில் ஒன்றான புதுக்குப்பத்தில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய், தந்தையரை இழந்து செய்வதறியாது இருந்தனர். இதில், உண்ண உணவும், ஆதரவும் இன்றி கண்ணீருடன் தவித்த ஐந்து சிறுமிகளை கண்டு மனம் நொடிந்து போனார் மாரியப்பன்.

மாரியப்பன் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் மட்டுமல்ல சிறந்த கால்பந்து வீரரும்கூட. மாரியப்பன் இந்திரா காந்தி அகாடமியை தொடங்கினார். இதனை அறிந்த சில நல் உள்ளம் படைத்தவர்கள் பலர் அவருக்கு நிதி உதவி அளித்தனர். சிறுமிகள் அப்போழுது இருந்தே கால்பந்து விளையாடக் கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.



கால்பந்து விளையாட்டில் சிறுமிகள் நன்கு தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கினார்கள் எனலாம். எனினும், சிறுமிகளை எப்படியாவது உதவி ஆய்வாளராக காவல் துறையில் சேர்க்க வேண்டும் என நினைத்த மாரியப்பன் சிறுமிகளின் பள்ளி படிப்பிற்கு பிறகு இலவச கல்வியை அளிக்கும் கல்லூரியை தேடி வந்தார்.

இவர்களுக்கு கடலூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரி உதவ முன் வந்தது. அவர்களுக்கு தேவையான படிப்பு, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளும் கிடைத்தது. இந்த ஐந்து மாணவிகளை தவிர பல மாணவிகளுக்கு ஆசிரியர் மாரியப்பன் முயன்ற உதவிகளை செய்துள்ளார். அதில், இன்னும் சில மாணவிகளுக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழத்தில் இடம் கிடைத்தது.



ஆசிரியர் மாரியப்பன் அவர்களிடம் ஐந்து வயதில் தஞ்சம் அடைந்த வினிதா, இந்துமதி, சரண்யா, தேன்மொழி, பத்மாவதி ஆகியார் எஸ்.ஐ தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர்ந்து உள்ளனர். இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. 2017 ஆம் ஆண்டில் ஆசிரியர் மாரியப்பன் மற்றும் 5 பெண்கள் பற்றிய கட்டுரை வெளியாகி இருந்தது.

இந்த ஐந்து பெண்களின் மூலம் பல எஸ்.ஐ, ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்பதே மாரியப்பன் அவர்களின் இலக்கு !

சுருக்கமாக

ஐந்து சிறுமிகளை வளர்த்து காவல் துறையில் உதவி ஆய்வாளர் என்ற பொறுப்பிற்கு வரும் அளவிற்கு துணையாய் இருந்து ஆளாக்கிய ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர் மாரியப்பன் வாழ்த்தப்பட வேண்டியவர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.