YouTurn

கணினியை இயக்கத் தெரியாததால் அதிமுகவினர் வெளிநடப்பு என பரப்பப்படும் எடிட் செய்தி !

கணினியை இயக்கத் தெரியாததால் அதிமுகவினர் வெளிநடப்பு என பரப்பப்படும் எடிட் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த  அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் நடைபெறும் பட்ஜெட் உரையை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்நிலையில், மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக புதிய தலைமுறை சேனலின் நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் இடம்பெற்ற, " மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர் " எனும் பகுதியை பார்க்கையில் எடிட் செய்யப்பட்டதாக தெரிந்தது.



Facebook link 

புதியதலைமுறையின் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், வைரல் செய்யப்படுவது போன்ற செய்தி நியூஸ் கார்டில் இடம்பெறவில்லை. அதில், " பேச வாய்ப்பு தரவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் " என்றே வெளியாகி இருக்கிறது.



முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தின் போது மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும் கணிப்பொறியை இயக்கத் தெரியாததால் கோபமடைந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது, அது போலியான செய்தி என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க