YouTurn

திருப்பூரில் வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம் எனத் தவறாகப் பரவும் ஜெய்பூர் வீடியோ !

திருப்பூரில் வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம் எனத் தவறாகப் பரவும் ஜெய்பூர் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம். தமிழகப் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று சொல்லி திருப்பூரில் பெண்ணை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. பெண் படுகாயம் எச்சரிக்கை எச்சரிக்கை. 



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

"வடமாநில கொள்ளையர்கள் திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுள்ளனர். அப்பெண் எதிர்பாராத நேரத்தில் தாக்கிவிட்டுப் பல லட்சம் மதிப்பிலான நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்று விட்டனர். அப்பெண் பலத்த காயத்திற்கு உள்ளாகியுள்ளார். எனவே எச்சரிக்கையாக இருங்கள் " எனக் கூறி ஒரு சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் சிசிடிவி காட்சியிலிருந்து ஸ்க்ரீன்ஷாட் எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடினோம். அவ்வாறு தேடியதில் நவ்பாரத் டைம்ஸ் (Navbharat Times) என்ற யூடியூப் பக்கத்தில் 2022, செப்டம்பர் 14ம் தேதி அவ்வீடியோ தொடர்பாகச் செய்தி பதிவிடப்பட்டுள்ளது. 



அந்த செய்தியில், ஜெய்பூரில் கர்தானி என்ற பகுதியில் நிகழ்ந்த சம்பவம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரி போல் வந்த ஒருவர் வீட்டில் உள்ள பெண்ணிடம் விசாரணை செய்கிறார். அந்த விசாரணையில் வீட்டில் யார் உள்ளது ? உங்களது கணவரின் பெயர் என்ன ? என்பது போன்ற விவரங்களைக் கேட்டுள்ளார்.

பின்னர், அந்த நபர் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுக் குடித்துள்ளார். அப்போது திடீரென அப்பெண்ணை தாக்கிவிட்டு அந்த போலி காவலர் மற்றும் இரண்டு பேர் வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டிலிருந்தப் பொருட்களைத் திருடிக் கொண்டு தப்பிச் செல்கின்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-யில் பதிவாகி உள்ளது " எனக் கூறப்பட்டு உள்ளது.



ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த இக்கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி வீடியோவினை தமிழ்நாட்டின் திருப்பூரில் நடந்ததாகப் பலர் சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

இந்த வீடியோ குறித்து தமிழ்நாடு காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், வதந்தியை பரப்ப வேண்டாம் எனப் பதிவிட்டுள்ளனர். 

முடிவு :

நம் தேடலில், வட மாநில கொள்ளையர்கள் திருப்பூரில் பெண் ஒருவரைத் தாக்கிவிட்டுப் பல லட்ச மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாகப் பரப்பப்படும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. அந்த கொள்ளை சம்பவம் ஜெய்பூரில் நடந்தது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க