YouTurn

திருப்பதி கோவில் அர்ச்சகர் வீட்டில் 128 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதா ?

திருப்பதி கோவில் அர்ச்சகர் வீட்டில் 128 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது கிடைத்த பணம், தங்க நகைகள், வைரம் எவ்வளவு தெரியுமா ??? 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்புள்ள வைரங்கள்.



Twitter link

விரிவான விளக்கம்

திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களின் ஒருவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்புள்ள வைரங்கள் கைப்பற்றப்பட்டதாக மேடையில் தங்க நகைகள் அடிக்கி வைக்கப்பட்டு இருக்கும் 30 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ? 

சமீபத்தில் திருப்பதி கோவில் அர்ச்சகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றியதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.

வைரல் செய்யப்படும் வீடியோவில் அனைத்து தங்க நகைகளிலும் கடைகளில் விற்பனை செய்யும் போது இடம்பெறும் டக்குகள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, வீடியோவின் பின்ணணியில் இருக்கும் அதிகாரிகள் தமிழில் பேசுவதையும் கேட்க முடிந்தது.



டிசம்பர் 15-ம் தேதி வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் துளையிட்டு கொள்ளைச் சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக காவல்துறை தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் 5 நாட்களில் கொள்ளையடிக்கப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை போலீசார் மீட்டதோடு, கொள்ளையனையும் கைது செய்தனர்.



அப்போது வேலூர் டி.ஐ.ஜி. பாபு மற்றும் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் மீட்கப்பட்ட நகைகள் உடன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டது குறித்து விளக்கமாக தெரியப்படுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்புள்ள வைரங்கள் கைப்பற்றப்பட்டதாக பரவும் தகவல் தவறானது.

அந்த வீடியோ வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கப்பட்ட போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க