
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் எத்தனை வீரர்கள் பலியாயினர் என அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதையடுத்து, சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என இந்திய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன. மத்திய அரசு சீன...
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
இந்நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சீன தயாரிப்பு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் பிற அப் ஸ்டோர்களில் இருந்து நீக்க மத்திய அரசின் தரப்பில் இருந்து சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளதாக மேற்காணும் சுற்றறிக்கை இந்திய அளவில் பரவி வருகிறது.
Claim: A viral message of an order allegedly from NIC claims that @GoI_Meity has prohibited some apps from being made available on App Stores. #PIBFactCheck: The Order is #Fake. No such instruction has been given by @GoI_MeitY or NIC. pic.twitter.com/Dt7rMR7nIz
— PIB Fact Check (@PIBFactCheck) June 19, 2020
Twitter link | archive link
ஆனால் மத்திய பத்திரிகை தகவல் மையம்(PIB) , அரசு தரப்பில் அப்படி எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை. மேற்கண்ட கூற்றுடன் பகிரப்படும் அறிக்கை போலியானது என ட்விட்டரில் பகிர்ந்து உள்ளது.

இதற்கு முன்பாக, டிக்டாக், யுசி ப்ரவுசர் உள்ளிட்ட 52 சீன செயலிகள் பட்டியலை புலனாய்வு அமைப்பு இந்திய அரசிடம் ஒப்படைத்து உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த செயலிகளை நீக்க வேண்டும் அல்லது மக்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துமாறு இன்டெல் ஏஜென்சி கேட்டுக் கொண்டது. இந்த செயலிகள் சீனாவுடன் இணைக்கப்பட்டுஉள்ளதாகவும் , இவைகள் அதிக அளவில் தகவல்களை கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. எனினும் இந்திய தரப்பில் சீன செயலிகளை நீக்குவதோ அல்லது தடை செய்ய எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.