
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த ஒரு சில வருடத்திலேயே டிக் டாக் எனும் செயலி அனைத்து தரப்பு மக்களிடமும் பிரபலமாகியது. எனினும், டிக் டாக் செயலியில் ஆபாசங்கள் அதிகரித்து உள்ளதாகவும், பலரும் தற்கொலைக்கு காரணம் என புகார்கள் எழுந்தன. இந்நிலையில், டிக் டாக் செயலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் செயலிக்கு தடை விதித்து உத்தவிட்டது...
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
இந்நிலையில், டிக் டாக் செயலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் செயலிக்கு தடை விதித்து உத்தவிட்டது உயர் நீதிமன்றம். இதன்பின், நீதிமன்ற உத்தரவை ஏற்ற மத்திய அரசும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது. மேலும், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டு உள்ளது.
எனினும், டிக் டாக் மீதான தடை நிரந்த தடையாக இல்லாமல் இருந்து உள்ளது. செயலியை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம் டிக் டாக் மீதான தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
Supreme Court asks Madras High Court to decide on a plea against ban order on video app TikTok on April 24. A Bench of Chief Justice Ranjan Gogoi says "if the plea is not decided by then, the order by the High Court imposing ban on the App would be vacated." pic.twitter.com/3DwMURAM2n
— ANI (@ANI) April 22, 2019
இந்த மேல்முறையீட்டு வழக்கில்உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோரைக் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், " ஏப்ரல் 24-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் டிக் டாக் செயலி மீதான தடை உத்தரவிற்கு எதிரான மனு குறித்து விசாரித்து முடிவு எடுக்க வேண்டும். மனு மீதான எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருந்தால் டிக் டாக் மீதான தடை தானாகவே விலகியதாக கருதப்படும் " எனத் தெரிவித்து உள்ளனர்.
தற்பொழுது வரை டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை. செயலி தரப்பில் இருந்து வாதங்கள் பெறவில்லை என்பதால், அவர்களின் மனுவின் மீதான விசாரணை தொடங்கி அவர்களின் வாதங்களை பெற்றப் பிறகு தடை குறித்த சரியான தகவல்கள் வெளியாகும்.
சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 24-ம் தேதி தகுந்த முடிவு எடுக்கவில்லை என்றால் மட்டுமே தடை நீங்க வாய்ப்புள்ளது. ஆனால், டிக் டாக் மீதான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதாக தவறான செய்திகளை சமூக வலைதளங்கள், செய்தி சேனல்களிலும் வெளியாகி வருகிறது.