YouTurn

தமிழர்களை எறும்புகள் என துக்ளக் இதழ் கார்ட்டூன் வெளியிட்டதா ?

தமிழர்களை எறும்புகள் என துக்ளக் இதழ் கார்ட்டூன் வெளியிட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

குருமூர்த்தி தமிழர்களை எறும்புகள் என்று கேவலப்படுத்தி கார்ட்டூன் போட்டுள்ளார் இதற்கு அதிமுக மற்றும் ரஜினி மக்கள் மன்ற நண்பர்கள் என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்கள்?



Archive link

விரிவான விளக்கம்

துக்ளக் வார இதழின் முகப்பு பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து வரையப்பட்டுள்ள கார்ட்டூனில் வாகனத்திற்கு முன்பாக எறும்புகளை வரைந்து எதிர்ப்பாளர்கள், தமிழர்கள் எனக் குறிப்பிட்டு உள்ளதாக இப்புகைப்படம் ட்விட்டர், முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



தமிழர்களை இழிவுப்படுத்தியதாக கண்டனத்துடன் வைரல் செய்யப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. வைரலாகும் புகைப்படம் குறித்து தேடிப் பார்க்கையில், அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என அறிய முடிந்தது.



Archive link 

2017-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி வெளியான துக்ளக் வார இதழில் ரஜினிகாந்த் குறித்து வெளியான சர்ச்சைக்குரிய கார்ட்டூனில் எதிர்ப்பாளர்களை எறும்புகள் என குறிப்பிட்டு வரைந்து இருப்பது உண்மையே. ஆனால், தமிழர்கள் எனக் குறிப்பிடவில்லை. தமிழர்கள் என எடிட் செய்து எழுதி இருக்கிறார்கள்.



2017-ல் சர்ச்சையான துக்ளக் கார்ட்டூனில் எடிட் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என தொடர்ந்து கருத்து கூறி வருபவர்களில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் ஒருவர்.

ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்த பிறகு ரஜினிகாந்திற்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே உருவாகி வரும் சமூக வலைதள மோதலை பார்க்க முடிகிறது. இதற்கிடையில், வதந்திகளையும் இணைத்து பதிவிட்டு வருகிறார்கள்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க