
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்

Facebook link | archive link

உண்மை என்ன ?
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஹரியானாவில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி பூஜா வாசிஸ்த் உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " வாழ்க்கையை எளிதாக்கும் நபர்கள் " எனக் கூறி வைரலாகும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். மேலும், சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Instagram link | archive link
அந்த புகைப்படத்தில், இடது பக்கத்தில் இருப்பவர் ஸ்ருதகீர்த்தி சோமவான்சி மற்றும் வலது பக்கத்தில் இருப்பவர் துஷார் குப்தா. ஐபிஎஸ் அதிகாரி துஷார் குப்தா உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
View this post on Instagram
A post shared by Tushar Gupta (@tusharg_ips) on Aug 22, 2020 at 7:03am PDT
Instagram link | archive link
பூஜா வாசிஸ்த், ஸ்ருதகீர்த்தி சோமவான்சி, துஷார் குப்தா ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தங்களைப் பற்றி தவறான தகவல் பரவுவதாகப் பதிவிட்டு உள்ளார்கள்.
Totally false information being spread. Here are the proofs from the instagram stories of those three different (by blood) IPS officers !
Kindly share it and as said, refrain other people from spreading, via your widespread account !@arunbothra pic.twitter.com/jqLPkeQHbn
— Janke kya karoge (@karad_sushil) September 6, 2020
Twitter link | archive link

2018-ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரி மூன்று பேரும் பயிற்சியில் ஒன்றாக இருந்தவர்கள். 2018 டிசம்பர் 19-ம் தேதி வெளியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் குறித்த அறிவிப்பில் மூன்று பேரின் விவரங்களும் இடம்பெற்று உள்ளதை காணலாம்.

முடிவு :
நம் தேடலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் என வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, ஒன்றாக ஐபிஎஸ் பயிற்சி பெற்றவர்கள் என்பதை அறிய முடிகிறது.