YouTurn

3 ஐபிஎஸ் அதிகாரிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல| பரவும் தவறான தகவல்!

3 ஐபிஎஸ் அதிகாரிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல| பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள். 2 அண்ணன்கள் மற்றும் 1 தங்கை என அனைவரும் ஐபிஎஸ் அதிகாரிகள்.

விரிவான விளக்கம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாகி உள்ளதாக இரு ஆண்கள் மற்றும் ஓர் பெண் காவலர் உடையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சார்ந்த முகநூல் பக்கங்களில் கூட இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.



Facebook link | archive link 



உண்மை என்ன ? 

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஹரியானாவில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி பூஜா வாசிஸ்த் உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " வாழ்க்கையை எளிதாக்கும் நபர்கள் " எனக் கூறி வைரலாகும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். மேலும், சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியையும் குறிப்பிட்டு இருக்கிறார்.



Instagram link | archive link

அந்த புகைப்படத்தில், இடது பக்கத்தில் இருப்பவர் ஸ்ருதகீர்த்தி சோமவான்சி மற்றும் வலது பக்கத்தில் இருப்பவர் துஷார் குப்தா. ஐபிஎஸ் அதிகாரி துஷார் குப்தா உடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.




Instagram link | archive link

பூஜா வாசிஸ்த், ஸ்ருதகீர்த்தி சோமவான்சி, துஷார் குப்தா ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தங்களைப் பற்றி தவறான தகவல் பரவுவதாகப் பதிவிட்டு உள்ளார்கள்.



Twitter link | archive link 



2018-ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரி மூன்று பேரும் பயிற்சியில் ஒன்றாக இருந்தவர்கள். 2018 டிசம்பர் 19-ம் தேதி வெளியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் குறித்த அறிவிப்பில் மூன்று பேரின் விவரங்களும் இடம்பெற்று உள்ளதை காணலாம்.



முடிவு : 

நம் தேடலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் என வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, ஒன்றாக ஐபிஎஸ் பயிற்சி பெற்றவர்கள் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க