YouTurn

10 கோடி வாங்கினாரா திருமுருகன் காந்தி?

10 கோடி வாங்கினாரா திருமுருகன் காந்தி?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி அன்னை தெரசா அறக்கட்டளையில் இருந்து கோடிக்கணக்கான பணம் வாங்கியதாக ஒரு காசோலை படத்துடன் இணைத்து செய்திகள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. காசோலையில் இடம் பெற்றிருக்கும் எழுத்துரு வகை சீராக இல்லாமல் வேறு வேறாக அமைந்துள்ளது. ஒரு சில எழுத்துகள் தடித்தும் சில...

பரவிய செய்தி

திருமுருகன் காந்தி அன்னை தெரசா அறக்கட்டளையில் இருந்து பெற்ற 10 கோடி ருபாய் நிதி!

விரிவான விளக்கம்

மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி அன்னை தெரசா அறக்கட்டளையில் இருந்து கோடிக்கணக்கான பணம் வாங்கியதாக ஒரு காசோலை படத்துடன் இணைத்து செய்திகள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன.



காசோலையில் இடம் பெற்றிருக்கும் எழுத்துரு வகை சீராக இல்லாமல் வேறு வேறாக அமைந்துள்ளது. ஒரு சில எழுத்துகள் தடித்தும்  சில எழுத்துகள் மெல்லியதாகவும் உள்ளன.



மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் IFSC குறியீடு ஸ்டேட் பேங்க் ஆப்  இந்தியா வங்கிக்கு  SBI  என்று ஆரம்பிக்கும் . இதில்DBI என்று குறிப்பிட்டுள்ளது. IFS  குறியீட்டை விளக்கும் ஒரு வலைத்தளத்தில் மாதிரி படத்தில் STATE BANK  OF  INDIA என்பதற்கு பதிலாக DEMO BANK  OF  INDIA என்று குறிப்பிட்டு இருந்ததை அப்படியே எடுத்து மாற்றாமல் வைத்துள்ளனர்.கொல்கத்தா என்று குறிப்பிட்டிருக்கும் முகவரியையும் அப்படியே எடுத்து வைத்துள்ளனர்.



மேக்னெட்டிக் மை எழுத்துக்களை அடையாளம் காணும்  MICR ( Magnetic Ink Character Recognition ) எண்  ஒவ்வொரு வங்கிக்கும் மாவட்டத்திற்கும் வேறுபடும். காசோலையில் கீழே குறிப்பிட்டுள்ள MICR-இல்  இருக்கும்  நகரம் / வங்கி / கிளை குறியீட்டு எண் 695002032. இது கேரளாவில் இருக்கும் திருவனந்தபுரத்தில் உள்ள SBI வங்கியின் குறியீட்டு எண்ணாகும். கொல்கத்தா வங்கி எண் இல்லை. இதையும் இன்னொரு மாதிரி காசோலை படத்தில் இருந்து எடுத்து இருக்கிறார்கள்.

அதிக தவறுகளுடன் எடிட் செய்யப்பட்ட இந்த காசோலை போலி  என இதன் மூலம் தெரிகிறது.

சுருக்கமாக

இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் காசோலை  எடிட் செய்யப்பட்டிருக்கிறது. இதில் தவறான செல்லாத குறியீடுகள் காணப்படுகின்றன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.