YouTurn

தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என திருமாவளவன் கூறினாரா ?

தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என திருமாவளவன் கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியான இரட்டைமலை சீனிவாசன் குயிலி போன்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாரும் தமிழக அரசு அலங்கரித்த குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. - விசிக தலைவர் திருமாவளவன்.



Twitter link

விரிவான விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்றும், இரட்டைமலை சீனிவாசன், குயிலி போன்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாரும் தமிழக அரசு அலங்கரித்த குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறவில்லை எனக் கூறியதாக புதியதலைமுறை சேனலின் நியூஸ் கார்டு ஒன்று வைரல் செய்யப்பட்டது வருகிறது.





உண்மை என்ன ? 

திருமாவளவன் தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை எனக் கூறியதாக எந்த செய்தியும் சமீபத்தில் வெளியாகவில்லை. புதியதலைமுறை சேனலின் முகநூல் பக்கத்தை ஆராய்ந்த போதும் அவ்வாறான எந்த செய்தியும் இடம்பெறவில்லை.



Facebook link 

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் ஜனவரி 18-ம் தேதி என இடம்பெற்று இருந்ததால், அந்த தேதியில் தேடுகையில், " மேயரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை தேவை. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை நேரடியாக மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை மீண்டும் அமல்படுத்துக. துணைத்தலைவர் பதவிக்கு தலித் பழங்குடியினர், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் " என திருமாவளவன் கூறியதாகவே செய்தி வெளியாகி இருக்கிறது.



இதுகுறித்து புதியதலைமுறையின் இணையதளப் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், இதை நாங்கள் வெளியிடவில்லை. போலியான நியூஸ் கார்டு " எனத் தெரிவித்து இருந்தனர்.

முடிவு : 

நம் தேடலில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியான இரட்டைமலை சீனிவாசன் குயிலி போன்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாரும் தமிழக அரசு அலங்கரித்த குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என எம்.பி திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க