யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வங்கதேசத்தின் மவுல்வி பஜாரில் அமைந்துள்ள காளி கோவிலுக்கு முன்பு அமைந்துள்ள கடையில் நெருப்பு வைக்கப்பட்டதை, காளி கோவிலுக்கு நெருப்பு வைத்ததாகக் கூறி இரண்டு நாட்களாக வலதுசாரிகள் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
மவுல்வி பஜார் பங்களாதேஷ் 200 வருட காளி கோவில் தீ வைத்து எரிப்பு
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 04) ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 91 பேர் கொல்லப்பட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோா் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வங்கதேசத்தின் மவுல்வி பஜாரில் அமைந்துள்ள 200 வருட பழமையான காளி கோவிலுக்கு தீ வைக்கப்பட்டதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் இரண்டு நாட்களாக வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
Kaali Mandir burned down in Bangladesh.
— Tathvam-asi (@ssaratht) August 5, 2024
Hindus in India, this is exactly what will happen when Mlechas become majority in India.
You may not have witnessed what happened in Pakistan after partition, so witness what’s happening in Bangladesh right in front of your eyes and wake… pic.twitter.com/pc0ptE7NBO
A 200 year old Kali Mandir in my, Moulvibazar , Bangladesh has been burnt down by mob of i&lamists . #Bangladesh #SheikhHasina #All_Eyes_On_Bangladesh #AllEyesonBangladesh #SaveBangladeshiHindus pic.twitter.com/qf6lJRonGz
— Amitabh Chaudhary (@MithilaWaala) August 5, 2024
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், வங்கதேசத்தின் மவுல்வி பஜாரில் அமைந்துள்ள காளி கோவிலுக்கு முன்பு அமைந்துள்ள கடைகளில் நெருப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை ‘Sagor Dash’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ மூலம் அறியமுடிந்தது.

மேலும் வங்கதேசத்தின் மவுல்வி பஜாரில் அமைந்துள்ள 200 வருட பழமையான காளி கோவிளுக்கு தீ வைக்கப்பட்டதாக இரண்டு நாட்களாக வலதுசாரிகள் புகைப்படம் ஒன்றை பரப்பி வரும் நிலையில், ‘Sagor Dash’ என்ற ஃபேஸ்புக் பயனர், காளி கோவில் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறி நேற்று (ஆகஸ்ட் 05) இரவு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதே போன்று, காளி கோவிலில் தீ வைக்கப்படவில்லை, கோவிலின் முன்புதான் நான் இருக்கிறேன் என்று கூறி, ‘Sonjiy Dash’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், மவுல்வி பஜாரில் அமைந்துள்ள காளி கோவிலின் தற்போதைய புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருந்தன.

இதன்மூலம் வங்கதேசத்தின் மவுல்வி பஜாரில் அமைந்துள்ள காளி கோவிலுக்கு முன்பு அமைந்துள்ள கடையில் நெருப்பு வைக்கப்பட்டதை, காளி கோவிலுக்கு நெருப்பு வைத்ததாகக் கூறி இரண்டு நாட்களாக வலதுசாரிகள் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
முடிவு:
நம் தேடலில், 200 வருட பழமையான வந்கதேச காளி கோவில் எரிக்கப்பட்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
